பேஸ்புக்கில் காதல் வலை விரித்து பல பெண்களிடம் உல்லாசம்.. கூரியர் நிறுவன மானேஜர் கைது
சென்னையில் பேஸ்புக் மூலம் காதல் செய்து விமான பெண் ஊழியருடன் உல்லாசம் அனுபவித்து , திருமணத்திற்கு மறுத்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை: சென்னையில் பேஸ்புக் மூலம் காதல் செய்து விமான பெண் ஊழியருடன் உல்லாசம் அனுபவித்து , திருமணத்திற்கு மறுத்த காதல் மன்னனை போலீசார் கைது செய்தனர்.
புதுக்கோட்டையைச் சேர்ந்தவர் அப்துல் ரசீப் (27). இவர் ரசீப் சென்னை புத்தேரியில் உள்ள தனியார் கூரியர் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வந்தார்.
சென்னை அண்ணா பல்கலைக்கழக ஊழியர் குடியிருப்பை சேர்ந்த 28 வயது பட்டதாரி பெண் ஒருவர் , தன்னுடைய உறவினர் வீட்டில் தங்கி, தனியார் விமான நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார்.

பேஸ்புக் காதல்
அப்துல் ரசீப்பும் , அந்த பெண்ணும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் பேஸ்புக் மூலம் நண்பர்களாக அறிமுகமாகியுள்ளனர். பின்னர் தினமும் பேஸ்புக் மூலம் பேசி வந்துள்ளனர்.

காதலாக மாறிய நட்பு
தொடர்ந்து பேசி வந்த இருவரின் நட்பும், நாளடைவில் காதலாக மாறியது. ஒரு ஆண்டுகளாக இருவரும் நேரடியாக சந்திக்காமல் பேஸ்புக் மூலமாகவே காதலித்து வந்துள்ளனர்.

முதல் சந்திப்பு
கடந்த ஒரு ஆண்டுக்கு முன் இருவரும் வேளச்சேரியில் உள்ள தனியார் ஷாப்பிங் மாலில் முதன்முறையாக சந்தித்துள்ளனர். பின்னர் இவர்கள் அடிக்கடி பல இடங்களில் ஒன்றாக சுற்றி வந்துள்ளனர்.

ஆசை வார்த்தை
இதற்கிடையே திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி , அப்துல் ரசீப் பலமுறை அந்த பெண்ணிடம் கடந்து ஒரு ஆண்டுகளாக உல்லாசம் அனுபவித்து இருக்கிறார்.

திருமணம் செய்ய பெண் வீட்டில் முடிவு
இந்நிலையில் அந்த பெண்ணிற்கு , அவருடைய பெற்றோர் திருமண செய்ய முடிவு செய்தனர். இதனை அப்துல் ரசீப்பிடம் அந்த பெண் தெரிவித்துள்ளார். இதனால் ரசீப் அந்த பெண்ணிடம் இருந்து விலக ஆரம்பித்துள்ளார்.

ரசீப் மீது பெண் போலீசில் புகார்
இதனைத்தொடர்ந்து தன்னை திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றிவிட்டதாக , தகுந்த ஆதரங்களுடன் அந்த பெண், சென்னை மயிலாப்பூரில் உள்ள அனைத்து மகளீர் காவல் நிலையத்தில் கடந்த 16ம் தேதி புகார் அளித்துள்ளார். பின்னார் போலீசார் வழக்கு பதிவு செய்து சென்னை மாம்பாக்கத்தில் தங்கி இருந்த அப்துல் ரசீப்பை கைது செய்தனர்.

காதல் மன்னன் ஆசிப்
போலீசார் ரசீப்பை விசாரணை செய்த போது பல திடுக்கிடும் தகவல் வெளிவந்தது. ரசீப் பேஸ்புக் மூலம் பல பெண்களிடம் பழகி உல்லாசமாக இருந்துள்ளார் என்பது அம்பலமானது.

சிறையில் அடைப்பு
ஆசிப்பிடம் இருந்து செல்போனை போலீசார் பறிமுதல் செய்தனர். அதன்பின் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆசிப்பை ஆஜர்படுத்தி, காதல் மன்னன் அப்துல் ரசீப்பை புழல் சிறையில் அடைத்தனர்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications