நெற்பயிர் கருகி நாசம்.. அதிர்ச்சியில் தூக்கிட்டு விவசாயி தற்கொலை.. டெல்டாவில் அதிகரிக்கும் மரணம்
நெற்பயிர் கருகிய அதிர்ச்சியில் நாகை மாவட்ட விவசாயி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
நாகை: டெல்டா மாவட்டமான நாகையில் விவசாயிகள் தற்கொலை அதிகரித்து வருகிறது. இன்று காலையில் விவசாயி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ளது செண்பகராயநல்லூர். இந்தப் பகுதியில் வசித்தவர் உலகநாதன். இவர் 2 ஏக்கர் பரப்பளவில் நெற் பயிர் விளைவித்திருந்தார். போதிய அளவு தண்ணீர் இல்லாமல் பயிர் கருகியது.

மேலும், அவருக்கு விவசாயக் கடனும் அதிகமாக இருந்துள்ளது. சாகுபடி செய்து கடனை கட்டிவிடலாம் என்ற நம்பிக்கையும் பொய்த்துப் போனதால் விவசாயி உலகநாதன் மிகவும் மனம் உடைந்து காணப்பட்டார். மன நெருக்கடி அதிகமானதால், அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதே போன்று திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் 2 ஏக்கர் கரும்பு பயிர் கருகிய வேதனையில் ஏற்பட்ட மாரடைப்பில் விவசாயி சுப்பிரமணியன் மரணம் அடைந்தார். விவசாயி சுப்பிரமணியன் வழக்கம் போல இன்றும் வயலுக்கு சென்ற போது அதே இடத்திலேயே சுருண்டு விழுந்து மரணம் அடைந்தார் என்று அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
தொடரும் விவசாயிகள் மரணத்தை தடுப்பதற்காக வழிவகைகள் குறித்து தமிழக அரசு இதுவரை அறிவிக்கவில்லை. இறந்த விவசாயிகளின் குடும்பத்திற்கான நிவாரணம் குறித்து அதிமுக தலைமையிலான அரசு வாய்த்திறக்காமல் உள்ளது வேதனை அளிக்கிறது என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications