தடை செய்யப்பட்ட உயிரினங்களை பிடித்த மீனவர்கள் கைது

தூத்துக்குடியிலிருந்து ராமேஸ்வரம் செல்லும் வழியில் உள்ளது பாதுகாக்கப்பட்ட கடல் வாழ் உயிரின பகுதியான மன்னார் வளைகுடா.
இங்கு அரிய வகை உயிரினங்களும், தாவரங்களும் வாழ்வதால் இங்கு மீன் பிடிக்க யாருக்கும் அனுமதி கிடையாது. தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இந்திய கடலோர காவல் படை அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது குருசடை பகுதியில் சிலர் நாட்டு படகில் மீன்பிடித்து கொண்டிருந்தனர். இதில் வேதாளை பகுதியை சேர்ந்த காசி என்பவரின் நாட்டு படகை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
அந்த படகில் தடை செய்ய 54 குதிரை முள்ளி சங்கு என்ற அரிய வகை கடல்வாழ் உயிரினம் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை அவர்கள் கண்டுபிடித்தனர்.
இதையடுத்து அந்த படகில் இருந்த காசி, முனியசாமி, சதிஷ்வரன், பாலசுப்பிரமணியன் ஆகிய 4 மீனவர்களை கைது செய்து சங்குகளை கைப்பற்றி, படகுகளையும் பறிமுதல் செய்தனர்.
கைது செய்யப்பட்ட மீனவர்கள் மண்டபம் கடலோர காவல் படை அலுவலகத்திற்கு அழைத்து வரப்பட்டனர். அவர்களிடம் கமாண்டர் மோரோ விசாரணை நடத்தினார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், மன்னார் வளைகுடா பகுதியில் அரிய வகை சங்குகளும், மீன்களும் தாவரங்களும் உள்ளன. இதனால் அங்கு மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதிக அளவில் மீன்பிடித்தால் மீன் வளம் குறையும், மீனவர்களும் பாதிக்கப்படுவார்கள். இதனால் தடை செய்யப்பட்ட சங்கு, கடல் குதிரை போன்றவற்றை பிடிப்பதை மீனவர்கள் தவிர்க்க வேண்டும்.
தவறுதலாக அவை வலையில் சிக்கினால் உடனடியாக அதை விடுவித்து கடலில் விட வேண்டும் என்று தெரிவித்தார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications