1.42 லட்சம் கனஅடி நீர் வெளியேற்றம்.. தமிழக காவிரி கரையோர பகுதிகளுக்கு வெள்ள எச்சரிக்கை
காவிரியிலிருந்து தமிழகத்திற்கு 1.42 லட்சம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
பெங்களூர்: காவிரியிலிருந்து தமிழகத்திற்கு 1.42 லட்சம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது, இதனால் தமிழகத்தில் காவேரி கரையோர பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
கர்நாடகா மற்றும் கேரளாவில் கடந்த இரண்டு வாராமாக கனமழை பெய்து வருகிறது. முக்கியமாக, கர்நாடகாவில் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் மீண்டும் கனமழை பெய்து வருகிறது. இதனால் தமிழகத்திற்கு நீர்திறப்பு மீண்டும் அதிகமாகி உள்ளது.
தற்போது கபினியிலுருந்து 80,000 கனஅடி வீதம் உபரிநீர் திறந்துவிடப்படுகிறது. அதேபோல் கிருஷ்ணராஜ சாகர் அணையிலிருந்து 62,000 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. மொத்தமாக காவிரியிலிருந்து தமிழகத்திற்கு 1.42 லட்சம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
மீண்டும் மேட்டூர் அணை வேகமாக நிரம்பி 120.85 அடியை தாண்டியுள்ளது. இதனால் அணையின் பாதுகாப்பு கருதி 16 கண் மதகு வழியாக தண்ணீர் திறக்கப்படுகிறது.
இதனால் பெரிய அளவில் காவிரி ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. சேலம், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், தருமபுரி, வேலூர் உள்ளிட்ட 12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
மக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளுக்கு தேவையில்லாமல் செல்ல கூடாது என்று கூறியுள்ளனர்.