குரங்கணியில் மட்டுமில்லை.. நியூட்ரினோ திட்டம் வரவிருந்த மலை தொடரிலும் காட்டு தீ!
தேனியில் நியூட்ரினோ திட்டம் அமைய இருக்கும் மலைத்தொடர் பகுதியிலும் காட்டு தீ ஏற்பட்டு இருக்கிறது.
Recommended Video

தேனி: தேனியில் நியூட்ரினோ திட்டம் அமைய இருக்கும் மலைத்தொடர் பகுதியிலும் காட்டு தீ ஏற்பட்டு இருக்கிறது. கடந்த ஒருவாரமாக அங்கு காட்டு தீ ஏற்பட்டு இருக்கிறது.
தற்போது குரங்கணி காட்டுப்பகுதியில் காட்டுத்தீ ஏற்பட்டு இருக்கிறது. இந்த காட்டுத்தீ கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு பரவி வருகிறது.இந்த பகுதியில் மலையேறும் பயிற்சியில் ஈடுபட சென்னை, கோவை, ஈரோடு மாணவிகள் வந்துள்ளனர்.
இந்தவிபத்தில் இது வரை 9 பேர் மரணம் அடைந்து இருக்கிறார்கள். 27 பேர் இதுவரை மோசமான காயங்களுடன் மீட்கப்பட்டு இருக்கிறார்கள்.

எந்த பகுதி
நியூட்ரினோ திட்டம் தேவராம் பொட்டிபுரம் மலைப்பகுதிகளில் செயல்படுத்தப்பட இருக்கிறது. இந்த இடத்தை மத்திய அரசு தேர்வு செய்ததற்கு நிறைய காரணம் கூறப்பட்டது. இந்த மலையை குடைந்து, அதில் சுரங்க பாதை அமைத்து ஆராய்ச்சி செய்யப்பட இருக்கிறது.

எவ்வளவு தூரம்
இந்த பகுதி தற்போது காட்டு தீ ஏற்பட்டு இருக்கும் குரங்கணி பகுதியில் இருந்து 30 கிமீ தூரத்தில் இருக்கிறது. இடையில் நிறைய காட்டுப்பகுதி இருக்கிறது. இந்த மலை வளம்தான் ஆராய்ச்சிக்கு முக்கியம் ஆகும்.

இதுவும் மோசம்
ஆனால் இந்த பகுதியில் காட்டு தீ ஏற்பட்டு இருக்கிறது. சுமார் 30 கிமீ காட்டுப்பகுதியில் இந்த தீ ஏற்பட்டு இருக்கிறது. நியூட்ரினோ திட்டம் அமைக்க பொட்டிபுரத்தில் குறிக்கப்பட்ட இடத்தில்தான் இந்த தீ விபத்து ஏற்பட்டு இருக்கிறது.

ஒருவாரம்
இந்த பொட்டிபுரத்தில் தீயை அணைக்க முடியாமல் வனத்துறை கஷ்டப்பட்டு வருகிறது. 8 நாட்களாக கஷ்டப்பட்டு தீயை அணைக்க முடியவில்லை என்று கூறப்படுகிறது. நியூட்ரினோ திட்டம் கொண்டு வரும் போது என்ன மாதிரியான பாதுகாப்பு பணிகள் செய்யப்படும் என்று கூறப்படவில்லை.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications