ராஜ்யசபா எம்பி: தேர்தலில் தோற்றும் பீனிக்ஸ் பறவையாய் எழுந்த ஐவர் அணி வைத்திலிங்கம்!
சென்னை: சட்டசபை தேர்தலில் தோல்வியடைந்த முன்னாள் அமைச்சரும், அதிமுகவின் ஐவர் அணியில் இடம்பெற்றவருமான வைத்திலிங்கம் ராஜ்யசபா எம்.பிக்கான தேர்தலில் போட்டியிட உள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
அதிமுகவில் அமைச்சர்கள் பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன், வைத்திலிங்கம், எடப்பாடி பழனிச்சாமி, பழனியப்பன், ஆகியோர் கொண்ட ஐவரணி, செல்வாக்கோடு திகழ்ந்தது.
சட்டசபை தேர்தலுக்கு முன்பாக, அதிமுக கூட்டணி கட்சிகளுடனான பேச்சை துவக்கியது. அப்போது, முதல்வருடன், ஐவரணியில் இடம் பெற்றிருந்த, அமைச்சர்கள் வைத்திலிங்கம், எடப்பாடி பழனிச்சாமி, ஆகியோருடன் புதிதாக, அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி ஆகியோர் இருந்தனர்.

இருவர் அணி
அதைத் தொடர்ந்து, ஐவர் அணி நால்வர் அணியாக மாறிவிட்டதாக பேச்சு எழுந்தது. இந்நிலையில், போயஸ் கார்டனில், சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், முதல்வரை சந்தித்து பேசினார். அப்போது, அமைச்சர்கள் வைத்திலிங்கம், எடப்பாடி பழனிச்சாமி மட்டும் இருந்தனர். அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, ஆகியோர் பங்கேற்கவில்லை.

சந்தேகம்
அதேபோல், புதுச்சேரி மாநில தேர்தல் பணி குறித்த ஆலோசனைக் கூட்டத்திலும், அமைச்சர்கள் வைத்திலிங்கம், எடப்பாடி பழனிச்சாமி, அம்மாநில தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட, அமைச்சர் சம்பத் மட்டும் பங்கேற்றனர். இதனால், ஐவர் அணி, நால்வர் அணியாகி, பிறகு, இருவர் அணியாக மாறி விட்டதோ என்ற சந்தேகம் கட்சியினரிடம் ஏற்பட்டது.

நம்பிக்கைக்கு உரியவர்
ஐவர் அணியோ, இருவர் அணியோ, வைத்திலிங்கம் மட்டும் அதில் இடம்பிடித்திருந்தார். அந்த அளவுக்கு ஜெயலலிதாவின் நம்பிக்கைக்கு பாத்திரமானவர் வைத்திலிங்கம். இந்நிலையில், சட்டசபை தேர்தலின்போது, ஒரத்தநாடு தொகுதியில் வைத்திலிங்கம் போட்டியிட்டார்.

தோல்வி
வைத்திலிங்கம், திமுக வேட்பாளர் ராமச்சந்திரனிடம் 3642 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். இதையடுத்து அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு வைத்திலிங்கம் ஆட்டம் க்ளோஸ் என்று அவரது அரசியல் எதிரிகள் நினைத்திருந்தனர். ஆனால், ராஜ்யசபா உறுப்பினர்களுக்கான தேர்தலில் வைத்திலிங்கத்தை களமிறக்கியுள்ளார் ஜெயலலிதா.

வெற்றி உறுதி
அதிமுகவின் எம்எல்ஏக்கள் பலம் அடிப்படையில், இத்தேர்தலில் வைத்திலிங்கம் வெற்றி பெற வாய்ப்பு பிரகாசம். எனவே தேசிய அரசியலில் வைத்திலிங்கம் கவனம் செலுத்த உள்ளார்.
-
விஜய், உதயநிதி, அண்ணாமலை.. இளம் முகம் இல்லாமல் தடுமாறும் அதிமுக.. எடப்பாடிக்கு அடுத்து யார்? -
அண்ணன் தம்பிகள்தானே! இடைத்தேர்தலில்.. அதிமுக-திமுக கூட்டணி! வாயை விட்ட சுப வீரபாண்டியன்! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்?












Click it and Unblock the Notifications