ஐஐடியில் சமஸ்கிருத பாடல் பாடிய விவகாரம்... தமாகா முற்றுகை போராட்டம்!

சென்னை ஐஐடி பல்கலைக்கழகம் முன்பு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    சென்னை ஐஐடி விழாவில் தேசிய கீதத்துக்கு பதில் சமஸ்கிருத பாடல்- வீடியோ

    சென்னை : சென்னை ஐஐடி நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு பதிலாக சமஸ்கிருத பாடல் பாடியதற்கு கண்டனம் தெரிவித்து ஐஐடி முன்பு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    தேசிய தொழில்நுட்ப மைய அடிக்கல் நாட்டு விழா மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தலைமையில் நேற்று சென்னை அடையாறில் உள்ள ஐஐடி வளாகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின் போது தமிழ்த்தாய் வாழ்த்துக்கு பதிலாக 'மஹா கணபதி' என்ற சமஸ்கிருத பாடல் இசைக்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    G.K.Vasan's TMC staged protest in front of IIT campus

    இதற்கு தமிழ் ஆர்வலர்களும், அரசியல் கட்சியினரும் கடுமையான கண்டனங்களை தெரிவித்தனர். இந்நிலையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர் ஐஐடி வளாகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தமாகா இளைஞர் காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து போராட்டத்தின் போது கோஷங்கள் எழுப்பப்பட்டன. தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்படாததற்கு ஐஐடி நிர்வாகம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.

    இந்நிலையில் ஐஐடி முன்பு மாணவ அமைப்பினரும் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக தகவல் வெளியானதையடுத்து போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கல்லூரிக்குள் மாணவர்களும், பேராசிரியர்களும் தீவிர பரிசோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+