பாலாற்றில் மணல் திருட்டு.... வாகனங்களை பறிமுதல் செய்த அதிகாரிகள்: வீடியோ
வேலூர் மாவட்டம் வாலஜா அருகே மணல் திருட்டில் ஈடுபட்டவர்களின் வாகனங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
வேலூர்: வாலஜா அருகே பாலாற்றில் அனுமதியின்றி மணல் அள்ளிய 16 வாகனங்களை கனிமவளத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
தமிழ்நாட்டில் காவிரி, தாமிரபரணி, வைகை, பாலாறு உள்ளிட்ட பெரிய ஆறுகளின் கரைகளில் மட்டுமின்றி, சிற்றாறுகளின் கரைகளில் உள்ள மணலையும் அனுமதியின்றி எடுத்துச் செல்வது வாடிக்கையாகி வருகிறது. இதனால் வெள்ள காலங்களில் ஆற்று நீர் கரையை தாண்டி ஊருக்குள் புகும் அபாயம் நிகழ்ந்து வருகிறது.

இந்நிலையில் வாலஜா அருகே பாலாற்றில் சிலர் அனுமதியின்றி மணல் அள்ளி வந்தனர். இதுகுறித்து கனிமமவளத்துறையினருக்கு புகார் அளிக்கப்பட்டது. அதையடுத்து அங்கு வந்த கனிமவளத்துறை அதிகாரிகள் மணல் திருட்டில் பயன்படுத்தப்பட்ட ஜேசிபி இயந்திரத்தையும் 16 லாரிகளையும் பறிமுதல் செய்தனர்.
சில நாட்களுக்கு முன்பு கரூர் அருகே காவிரி ஆற்றுப்படுகையில் மணல் திருட்டில் பயன்படுத்தப்பட்ட 10க்கும் மேற்பட்ட வாகனங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்த மணல் திருட்டை முழுவதும் ஒழிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications