அகதிகள் முகாமில் நடமாடும் பேய்: பீதியில் அலறும் மக்கள்
மானாமதுரை: மானாமதுரை அகதிகள் முகாமில் பேய் நடமாடுவதாக எழுந்த பீதியால் பொதுமக்கள் நிம்மதி இழந்து தவிக்கின்றனர். பேய் தங்கியிருப்பதாக கூறப்படும் பலாமரத்தை வெட்ட வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மானாமதுரை மூங்கில் ஊரணியில் 250 இலங்கை தமிழர்கள் குடும்பத்தினர் வசிக்கின்றனர். சுற்று வட்டார பகுதிகளில் கூலி வேலை செய்து பிழைத்து வரும் இவர்கள் மாலை 7மணிக்கு மேல் வீடு திரும்புவது வழக்கம்.
கடந்த மாதம் 23ம் தேதி அகதிகள் முகாமை சேர்ந்த ஜோசப் பல்வேடானா என்பவர் மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் முகாமில் உள்ள பலா மரத்தில் ஏறி தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.

உலா வரும் ஆவி
மரணத்திற்குப் பின்னர் அவரது ஆன்மா சாந்தியடையாமல் ஆவியாக உலா வருகிறார் என்று முகாம் மக்கள் நம்பத்தொடங்கியுள்ளனர். இதனால் இரவு நேரங்களில் அவர்கள் அச்சத்துடனே வாழ்ந்து வருகின்றனர்.

முடங்கிய மக்கள்
தற்கொலை செய்து கொண்ட மரத்தின் அருகில் முகாமிற்கான குடிநீர் குழாய் அமைந்துள்ளது. இச்சம்பவத்தால் குடிநீர் பிடிக்க பொதுமக்கள் அஞ்சி வருகின்றனர். மாலை ஆறு மணிக்கு மேல் யாரும் வீட்டை விட்டு வெளியே வருவது இல்லை. வீட்டிற்குள் முடங்கி கிடக்கின்றனர்.

மரத்தில் இருக்கிறார்
இதுகுறித்து ஆவியாக வருபவரின் மனைவி பெரியண்ணா கூறுகையில் அவர் தற்கொலை செய்து கொண்டது காலையில்தான் தெரியும் தற்போது எப்போது பார்த்தாலும் அவர் மரத்தின் மீது இருப்பது போல தெரிகிறது. மாலை நேரத்தில் அவர் வருகிறார் என யாரும் தண்ணீர் பிடிக்க கூட வருவதில்லை என்றார்.

பலாமரத்தை வெட்டுங்கள்
சரோஜா என்பவர் கூறுகையில் ஜோசப் இறந்ததில் இருந்து மாலையில் யாரும் வீட்டைவிட்டு வெளியே வருவதில்லை, வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடக்கின்றோம், எனவே இந்த பலாமரத்தை அகற்ற வேண்டும் என்றார். பலா மரத்தை அகற்றினால் மட்டுமே தங்களின் பீதி குறையும் என தெரிவிக்கின்றனர் முகாம் மக்கள்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications