”படார் படார்னு உடையதாம்... நொறுங்குதாம்... இடம் உங்களுக்கு தெரிஞ்சதுதான்” - இது 58வது முறை!
சென்னை: சென்னை மீனம்பாக்கத்தில் அமைந்துள்ள சர்வதேச தரத்திலான விமான நிலையத்தின் கண்ணாடிக்கதவுகள் 58வது முறையாக உடைந்து விழுந்துள்ளது.
சென்னை விமான நிலையத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்ணாடிகள் கழன்று விழுந்து நொறுங்கும் சம்பவம் அடிக்கடி நிகழ்கிறது. கடந்த 3 ஆண்டுகளில் மொத்தம் 57 முறை கண்ணாடி உடைந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 8 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த மார்ச் 12 ஆம் தேதி இரவு 57ஆவது முறையாக விமான நிலையத்தின் கண்ணாடி உடைந்து விழுந்தது. வெளிநாட்டு வருகை முனையத்தில் இருந்து உள்நாட்டு முனையத்திற்குச் செல்லும் பாதையில் கிட்டதட்ட 3 அடி அகலம், 4 அடி உயரமுள்ள கண்ணாடி கதவு உடைந்து விழுந்தது.
இந்நிலையில் இன்று உள்நாட்டு விமான நிலையத்தில் பெண் பயணிகளின் சோதனை அறையில் கண்ணாடி உடைந்து விழுந்தது. இதனையடுத்து மத்திய தொழில் பாதுகாப்புப்படை பெண் அதிகாரிகளும், பயணிகளும் பதற்றத்துடன் வெளியே ஓடி வந்தனர்.
அப்போது அந்தப் பகுதியில் பயணிகள் யாரும் இல்லாததால் அசம்பாவிதம் ஏதும் ஏற்படவில்லை. இதுகுறித்து விமான நிலைய அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications