அரசு செயல்படுகிறதா இல்லையா...? சிலை பாதுகாப்பு குறித்து சென்னை ஹைகோர்ட் சரமாரி கேள்வி
சிலைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க அரசு தவறி வருவதாக குற்றஞ்சாட்டிய நீதிபதிகள், அரசு செயல்படுகிறதா இல்லையா என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.
சென்னை: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் சிலை மாயம் மற்றும் தங்கமில்லாத சிலை செய்து மோசடி உள்ளிட்ட வழக்கை விசாரித்த நீதிபதிகள், அரசு செயல்படுகிறதா இல்லையா என கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும் அரசு சார்பாக சிலை கடத்தல்தடுப்பு போலீசாருக்கு முறையான உதவிகள் செய்யப்படவில்லை என்றும் நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர்.
சிலை கடத்தல் தடுப்பு பிரிவு தொடர்பாக இன்று சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசிடம் பல்வேறு கேள்விகளை முன்வைத்துள்ளது.

சிலை கடத்தல் தொடர்பான வழக்குகள் ஐஜி பொன். மாணிக்கவேல் தலைமையில் விசாரிக்கப்பட்டு வருகிறது. அவரது தலைமையிலான சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு உரிய வசதிகளை செய்து தரும்படி, தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவு பிறப்பித்திருந்தது.
இது தொடர்பான வழக்கில் இன்று சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசை தாக்கி பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. அதன்படி, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு உரிய வசதிகள் செய்து தரப்படவில்லை. தமிழக அரசு செயலிழந்து விட்டதா? உத்தரவுகளை நிறைவேற்றாமல் நீதிமன்றத்தோடு விளையாடாதீர்கள்.
ஜூலை மாதம் பிறப்பித்த 21 உத்தரவுகளை அறநிலையத்துறை ஆணையர் ஏன் இன்னும் நிறைவேற்றவில்லை? ஒரு சிலை செய்ய 40 ஆண்டுகள் வேண்டும் என்ற ரத்தக்கண்ணீர் வரலாறு உங்களுக்கு தெரியாதா?" என நீதிமன்றம் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
தொடர்ந்து, "2 வாரத்திற்குள் இதை சரிசெய்யாவிட்டால் சிலை கடத்தல் வழக்குகள் அனைத்தையும் சிபிஐ விசாரிக்க உத்தரவிடப்படும். மேலும் தமிழக தலைமை செயலர் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும்" என நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications