ரிசர்வ் வங்கி புதிய ஆளுநர் பதவிக்கு அருந்ததி பட்டாச்சார்யா உட்பட 4 பேர் பரிசீலனை
சென்னை: ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஐ) புதிய ஆளுநர் பதவிக்கு 4 பேரின் பெயர்களை இறுதிக்கட்டப் பரிசீலனைக்கு மத்திய அரசு எடுத்துக் கொண்டுள்ளது. ஆர்பிஐ துணை ஆளுநர் உர்ஜித் படேல், முன்னாள் துணை ஆளுநர்கள் ராகேஷ் மோகன், சுபீர் கோகர்ன், பாரத ஸ்டேட் வங்கியின் தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா ஆகியோரது பெயர்கள் இதில் இடம்பெற்றுள்ளன.
ரிசர்வ் வங்கியின் ஆளுநர் ரகுராம் ராஜனின் பதவிக் காலம் வரும் செப்டம்பரில் நிறைவடையவுள்ளது. அவரது பதவிக் காலம் நீட்டிக்கப்படலாம் என்று பரவலாக செய்திகள் வெளியாகின.

ஆனால் ரகுராம் ராஜனின் செயல்பாடுகள் குறித்து ஆளும் கட்சியான பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி கடுமையாக விமர்சித்தார். இதனால் ரிசர்வ் வங்கி ஆளுநர் பதவியை மீண்டும் வகிக்கப் போவதில்லை என்று ரகுராம் ராஜன் திட்டவட்டமாக மறுத்துவிட்டார்.
இந்த நிலையில் ரிசர்வ் வங்கிக்கு புதிய ஆளுநரை நியமிப்பது தொடர்பான நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரப்படுத்தி வருகிறது. அதன் அடிப்படையில், அடுத்த ஆளுநருக்கான தேர்வில் உர்ஜித் படேல், ராகேஷ் மோகன், சுபீர் கோகர்ன், அருந்ததி பட்டாச்சார்யா ஆகியோரது பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
இதில் எஸ்பிஐ வங்கியின் தலைவர் அருந்ததி பட்டாச்சார்யாவுக்கு வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது. இவர்தான் ஆஸ்திரேலியாவுக்கு சென்று பிரதமர் மோடிக்கு நெருக்கமான அதானி குழுமத்துக்கு ரூ6,000 கோடி கடன் கொடுக்க காரணமானவர்... மத்திய பாஜக அரசுடன் இணக்கமான போக்கை கடைபிடிக்கக் கூடியவர் என்பதால் அருந்ததி பட்டாச்சார்யா அடுத்த ரிசர்வ் வங்கி ஆளுநராக்கப்படலாம் என கூறப்படுகிறது.
-
ஆயிரம் பாதுகாப்பு கொடுத்தாலும்.. 'இது' மட்டும் குறையவேயில்லை.. RBI வெளியிட்ட பகீர் ரிப்போர்ட்! -
காவி வண்ணத்தில் வள்ளுவர்., ஆளுநர் செய்தது அயோக்கியத்தனம்! வெடித்துக் கிளம்பிய வைகோ! -
RBI-யின் 'கில் ஸ்விட்ச்'.. ஆன்லைன் மோசடியிலிருந்து உங்கள் பணத்தை.. ஒரே நொடியில் காப்பாற்றும் சக்தி -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications