கடைசிக் கொள்ளியும் வச்சுட்டாங்க.. முடிந்தது கிராமப்புற மாணவர்களின் டாக்டர் கனவு..!
சென்னை: படித்தது மாநில அரசின் பாடத் திட்டத்தில்... காலையில் கண் விழித்து, நள்ளிரவு வரை பள்ளி, ட்யூஷன் எனப் படித்து ப்ளஸ் டூ பொதுத் தேர்வு எழுதியது மாநில அரசுப் பாடத் திட்டத்தில். 1200-க்கு 1999 வரை மதிப்புப் பெற்றதும் அதே பாடத் திட்டத்தில்தான். ஆனால் அப்படிப் பெற்ற மதிப்பெண்ணுக்கு இனி எந்த மரியாதையும் கிடையாது.
மாநில அரசு பாடத் திட்டத்துக்கு சம்பந்தமே இல்லாத சிபிஎஸ்சி பாடப் பிரிவின் அடிப்படையில் நடத்தப்பட்ட நீட் தேர்வில் தேர்வு பெற்றால் மட்டுமே இனி மருத்துவப் படிப்பைப் படிக்க முடியும் என்ற கொடுமையான நிலையை தெரிந்தே அனுமதித்துள்ளன தமிழக அரசும் மத்திய அரசும். நீதித் துறையும் தெரிந்தே இந்த தேர்வை கட்டாயமாக்கியுள்ளது.
கிராமப்புறங்களில் 1190 வரை மதிப்பெண்கள் பெற்றுள்ளனர் பல மாணவர்கள். ஏன்.. பட்டியல் பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் பலர் இந்த அளவுக்கு மதிப்பெண் பெற்றுள்ளனர். ஆனால் அவர்களில் பலர் நீட் எழுதவில்லை... அல்லது எழுதியும் தேர்ச்சி பெறவில்லை.

தலையில் பாறாங்கல்லைப் போட்ட அரசு
'எப்படியும் தமிழக அரசு நீட் தேர்விலிருந்து விலக்குப் பெற்றுவிடும்' என்று பலமாக நம்பினர் இந்த மாணவர்களின் பெற்றோர்கள். அவர்கள் நம்பிக்கையில் பாறாங்கல்லைப் போட்டுவிட்டது அரசு.

இனி வரும் ஆண்டுகளும் துயரமே
இந்த ஆண்டு மட்டுமல்ல, இனி வரும் ஆண்டுகளிலும் கூட நீட் தேர்வில் எத்தனை கிராமப்புற மாணவர்கள் தேர்ச்சி பெறுவார்கள் என்பது தெரியவில்லை. ஆக திட்டமிட்டே தமிழக மாணவர்களின் மருத்துவக் கனவு தகர்க்கப்பட்டுள்ளது.

நீதிமன்றம் போட்ட பாதை
இன்னொரு பக்கம் சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு மட்டும் முழுமையாக மருத்துவக் கல்வி கிடைக்கவும் நீதிமன்றம் வழிவகுத்துக் கொடுத்துள்ளது, தமிழக அரசின் உள் ஒதுக்கீட்டை ரத்து செய்ததன் மூலம்.

வெளிநாடுதான் வழியா
இந்த ஆண்டுதான் எப்போதும் இல்லாத அளவுக்கு மருத்துவக் கல்வி படிப்புக்காக தமிழ்நாட்டு மாணவர்கள் பிலிப்பைன்ஸ், ரஷ்யா, ஜார்ஜியா, கயானா, கிர்க்கிஸ்தான், யுக்ரைன், சீனா, பங்களாதேஷ் போன்ற நாடுகளுக்குச் சென்ற வண்ணமுள்ளனர். இப்போது நீட் கட்டாயம் என்றாகிவிட்டதால், இன்னும் சில ஆயிரம் மாணவர்கள் பயணிக்கக் கூடும்.
இனி வரும் ஆண்டுகளில் தமிழ்நாட்டு மாணவர்களுக்கென்றே தனி கேம்பஸ்களை இந்த வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் உருவாக்கினாலும் ஆச்சர்யமில்லை.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications