நேற்று அதிமுகவுடன் போட்டி என்று கூறி விட்டு இன்று ஜெ. பதவியேற்பை சிரித்தபடி ரசித்த எச்.ராஜா!
Subscribe to Oneindia Tamil
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா, 2016 சட்டசபைத் தேர்தலில் பாஜகவுக்கும், அதிமுகவுக்கும்தான் நேரடிப் போட்டி என்று பேசியிருந்தார். ஆனால் இன்று முதல்வர் ஜெயலலிதாவின் பதவியேற்பு விழாவில் சிரித்த முகத்துடன் பரவசமாக கலந்து கொண்டார்.

திண்டுக்கல்லில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய எச்.ராஜாவின் பேச்சு இதுதான்...
- வேளாண் அதிகாரி முத்துக்குமாரசாமி தற்கொலைக்குப் பிறகு அதிமுகவின் பாப்புலாரிட்டி குறைந்துவிட்டது.
- தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது.
- புதிய முதல்வருக்கு வாழ்த்து தெரிவித்துக்கொள்கிறேன்.
- இந்த மாற்றம் முலம் எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
- பாஜக கூட்டணியில் சில கட்சிகள் இருக்கின்றன. ஒரு கட்சி வெளியேறி சென்று விட்டது.
- சில கட்சிகள் கூட்டணிக்கு வரலாம். இதுபற்றி தேர்தல் நேரத்தில் தான் தெரியவரும்.
- தமிழ்நாட்டில் 40 லட்சம் உறுப்பினர்களை சேர்த்து இருக்கிறோம்.
- 2ஜி, ஏர்செல் மேக்சிஸ் போன்ற வழக்குகளில் தீர்ப்புக்கள் வர உள்ளதால் திமுக சங்கடத்தில் உள்ளது.
இதன் காரணமாக 2016ல் பாஜகவுக்கும் அதிமுகவுக்கும்தான் போட்டி இருக்கும் என்று கூறியிருந்தார் ராஜா.












Click it and Unblock the Notifications