நீட் காவு கொண்ட அனிதா மரணம் குறித்து விசாரிக்க ஹைகோர்ட் உத்தரவு
நீட் காவு கொண்ட அனிதாவின் மரணம் குறித்து விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை: நீட் தேர்வால் மரணித்துப் போன அரியலூரி அனிதாவின் மரணம் தொடர்பாக விசாரணை நடத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தையே போர்க்களமாக்கியது அனிதாவின் அநியாய மரணம். ஆனால் அனிதாவின் மரணத்தை கொச்சைப்படுத்தியும் சிலர் கருத்துகளை தெரிவித்தனர்.
இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ரஞ்சன் என்பவர் ஒரு மனுவைத் தாக்கல் செய்திருந்தார். அதில், அனிதா மரணம் தொடர்பான புகாரை விசாரிக்க கோரி செந்துறை காவல்நிலைய ஆய்வாளரிடம் மனு கொடுத்தேன். ஆனால் அது விசாரிக்கப்படவில்லை என தெரிவித்திருந்தார்.
இதனை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், அனிதா மரணம் தொடர்பாக விசாரிக்க வேண்டும். விசாரணையில் முகாந்திரம் இருந்தால் வழக்குப் பதிவு செய்ய வேண்டும். அப்படி முகாந்திரம் எதுவுமே இல்லையெனில் விசாரணை அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.