சீனாவிலும் கொடுக்கிறார்கள்.. நிலவேம்பு கசாயத்தில் பக்க விளைவு கிடையாது: சுகாதாரத்துறை செயலாளர் பளிச்
நிலவேம்பு கசாயத்தால் மலட்டுத் தன்மை ஏற்படாது என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சேலம் : நிலவேம்பு கசாயம் குறித்து பிரபலங்களுக்கு சந்தேகம் இருந்தால் அரசு சித்த மருத்துவர்கள் மூலம் விளக்கம் அளிக்க அரசு தயாராக உள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சேலத்தில் டெங்கு பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நேரில் ஆய்வு செய்தார். இந்த ஆய்விற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது : டெங்குவிற்கு தாமதமாக சிகிச்சை எடுத்துக்கொள்வதே பாதிப்பிற்கு முக்கிய காரணம். எதிர்ப்பு சக்திக்காக நிலவேம்பு கசாயம் அளிக்கப்படுகிறது. நிலவேம்புக் கசாயம் அங்கீகரிக்கப்பட்ட சித்த மருந்தாகும்.

நிலவேம்புக் கசாயத்தை 1000 மில்லி கிராம் வரை எடுத்துக் கொள்ளலாம். நிலவேம்புச் சாறை எடுத்துக் கொள்வதன் மூலம் மலட்டுத் தன்மை ஏற்படும் என்பது உண்மையல்ல.
டெங்குவை ஒழிக்க மக்களின் ஒத்துழைப்பும் தேவை. அரசின் சித்த மருத்துவத் துறை மூலம் ஆராய்ச்சி செய்த பின்னரே நோயாளிகளுக்கு நிலவேம்புக் கசாயம் வழங்கப்படுகிறது. நிலவேம்பினால் எந்த பாதிப்பும் இல்லை என்று சான்று உள்ளது. சீனா உள்ளிட்ட நாடுகளிலும் நிலவேம்பு கசாயம் நோயாளிகளுக்கு அளிக்கப்படுகிறது.
பிரபலங்களுக்கு சந்தேகம் இருந்தால் அரசு சித்த மருத்துவர்கள் மூலம் விளக்கம் அளிக்க அரசு தயாராக உள்ளது. அதைவிடுத்து தவறான தகவல்களைப் பரப்ப வேண்டாம் என்று ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
நிலவேம்புக் கசாயம் குறித்து ஆய்வு முடிவுகள் வெளியாகும் வரை அதனை பொதுமக்களுக்கு விநியோகிக்க வேண்டாம் என்று நடிகர் கமல்ஹாசன் ரசிகர் மன்ற நிர்வாகிகளை கேட்டுக் கொண்டிருந்தார். இந்தக் கோரிக்கையை அடுத்து கமல்ஹாசன் கருத்துக்கு பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. கமல்ஹாசன் அவதூறு பரப்புவதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சென்னை போலீசிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன் -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ் -
பாஜக சிட்டிங் எம்.எல்.ஏவுக்கு சீட் மறுப்பு.. தொகுதி மாறிய 2 MLAக்கள்! வேட்பாளர் பட்டியலில் ட்விஸ்ட்! -
வில்லிவாக்கத்தில் நானே வேட்பாளர் என நினைத்துக் கொள்ளுங்கள்.. நண்பனுக்காக களம் இறங்கிய சபரீசன் பேட்டி -
கிரவுண்ட் ஜீரோ ரிப்போர்ட்.. தரைதட்டிய களப்பணி.. கிரவுண்டில் திணறும் தவெக.. விஜய்க்கு சிம்ம சொப்பனம் -
பாஜக வேட்பாளர் பட்டியல் வந்ததுமே அண்ணாமலை கொடுத்த முதல் ரியாக்ஷன்!












Click it and Unblock the Notifications