பவானி ஆற்றில் மணல் எடுத்தால் கடும் நடவடிக்கை: பொதுப்பணித்துறை அதிகாரிகள் எச்சரிக்கை
பவானி ஆற்றில் மணல் எடுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
ஈரோடு: பவானிசாகர் அணையில் வண்டல்மண் எடுப்பதை தடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகேயுள்ள பவானிசாகர் அணைப்பகுதியில் தற்போது தண்ணீர் குறைவான அளவில் உள்ளது.இதனை பயன்படுத்தி அணையினை தூர்வார வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதனையடுத்து அணையில் படிந்துள்ள வண்டல் மண்ணை விவசாயிகள் இலவசமாக எடுத்து செல்ல மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால் மாவட்ட நிர்வாகத்தின் இந்த உத்தரவை ஆளும் கட்சியினர் தவறாக பயன்படுத்துவதாக புகார் எழுந்தது.மேலும் அதிகாரிகள் துணையோடு ஆளும் கட்சியினர் சிலர் சட்டவிரோதமாக மணல் எடுப்பதாக கூறி கிராமமக்கள் லாரிகளை சிறைபிடித்து கடந்த சில தினங்களுக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி லாரிகளை மீட்டனர்.
இந்நிலையில் பவானிசாகர் அணைப்பகுதியில் வண்டல் மண் உரிய அனுமதியுடன் எடுக்கப்பட்டு வருவதாக பொதுப்பணிதுறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்படும் வண்டல்மண்ணை லாரியில் ஏற்றுவதற்காக மட்டும் பொக்லைன் இயந்திரத்திற்கு ஒரு யூனிட்டிற்கு 106 ரூபாய் வழங்க வேண்டும் எனவும் இவ்வாறு வண்டல் மண் எடுப்பவர்களை தடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அணையில் தண்ணீர் இல்லாததை பயன்படுத்தி அதில் பயிர்சாகுபடி செய்துள்ளவர்கள்தான் இதுபோன்ற போராட்டத்தில் ஈடுபடுவதால் அதிகாரிகள் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
-
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
அதிமுக முன்னாள் அமைச்சர்களின் உருவபொம்மைகளுக்கு செருப்பு மாலை! பொள்ளாச்சியில் பரபரப்பு -
திரிஷா பற்றிய மொத்த பிரச்சனைகளுக்கும் ஒரே போஸ்டில் அவரே பதில்.. இப்படி ஒரு ரியாக்ஷனை எதிர்பார்க்கலையே












Click it and Unblock the Notifications