தமிழகத்தில் கனமழையால் பலியானோர் எண்ணிக்கை 112 ஆக உயர்வு
சென்னை: தமிழகத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் பலியானவர்களின் எண்ணிக்கை 112 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று முதல் 3 நாட்களுக்கு தமிழகத்தின் கடலோர பகுதிகளில் கனமழை பெய்யும் என்றும், பிற மாவட்டங்களில் சில பகுதிகளில் கன மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஏற்கனவே பெய்த கனமழையால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகள் நீரில் மிதக்கையில் மேலும் கனமழை பெய்யும் என்ற அறிவிப்பு மக்களுக்கு அச்சத்தை அளித்துள்ளது. கனமழையால் பல்வேறு பகுதிகளில் வீடுகள் இடிந்தும், மரங்கள் விழுந்தும் பலர் பலியாகியுள்ளனர்.
இது போன்ற சம்பவங்களில் சனிக்கிழமை மட்டும் 9 பேர் பலியாகியுள்ளனர். மாநிலத்தில் கனமழைக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 112 ஆக அதிகரித்துள்ளது. வெள்ளத்தில் மிதக்கும் கடலூர் மாவட்டத்தில் தான் அதிகாமானோர் பலியாகியுள்ளனர்.
திருச்சி அருகே உள்ள புத்தூர் மீன் சந்தையில் மின் கம்பி அறுந்து கிடந்தது. அதை அகற்ற முயற்சி செய்கையில் மின்சாரம் தாக்கி மீன் வியாபாரி பலியானார்.
கால்நடைகள்:
தரமணியில் உள்ள கலைஞர் நகரில் வசித்து வரும் வெங்கடேசன்(30) என்பவரின் பசுமாடு வெள்ளிக்கிழமை இரவு பிள்ளையார் கோவில் வழியாக சென்றுள்ளது. அங்கு பூமிக்கு அடியில் புதைக்கப்பட்டிருந்த கேபிளில் இருந்து மின் கசிந்துள்ளது. அதை மிதித்த பசுமாடு மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக உயிர் இழந்தது. வெள்ளிக்கிழமை அதே இடத்தில் நாய் ஒன்று மின்சாரம் தாக்கி பலியானது.
பிள்ளையார் கோவில் பகுதியில் கடந்த 9ம் தேதி முதல் கேபிளில் இருந்து மின்கசிவதாகவும் இது குறித்து மின்வாரியத்திடம் புகார் அளித்தும் பலனில்லை என்றும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
-
பொதுமக்களே உஷார்! இன்று 22 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை.. மஞ்சள் அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications