பணமோசடி வழக்கில் நத்தம் விஸ்வநாதனுக்கு நிபந்தனை முன்ஜாமீன்
பணமோடி தொடர்பான வழக்கில் முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதனுக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை நிபந்தனை முன் ஜாமின் வழங்கியுள்ளது.
மதுரை: பணமோடி தொடர்பான வழக்கில் முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதனுக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை நிபந்தனை முன் ஜாமின் வழங்கியுள்ளது. திண்டுக்கல்லைச் சேர்ந்த சபாபதி என்பவர் தொடர்ந்திருந்த வழக்கில் மதுரை உயர்நீதிமன்ற கிளை ஜாமின் வழங்கியுள்ளது.
லோக்சபா தேர்தலில் அதிமுக வேட்பாளரின் தேர்தல் செலவுக்காக வழங்கிய பணத்தில் ரூ.2,97,90,700-யை திரும்ப தராமல் கொலை மிரட்டல் விடுத்ததாக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதனுக்கு எதிராக திண்டுக்கல் ஒன்றிய அதிமுக இளைஞரணி துணைச் செயலர் ஏ.சபாபதி திண்டுக்கல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இவரது புகாரின் பேரில் போலீஸார் கொலை மிரட்டல், மோசடி உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் விஸ்வநாதன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். ஆனால் அவர் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி மதுரை ஹைகோர்ட்டில் சபாபதி வழக்கு தொடர்ந்தார். அநத் வழக்கை நேற்று விசாரித்த நீதிபதி அரசியல் காரணங்களுக்காக நீதிமன்ற நேரத்தை வீணடிக்காமல், ஆக்கப்பூர்வமான பணிகளில் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.
மேலும் அந்த வழக்கு விசாரணையை நீதிபதி இன்றைக்கு ஒத்திவைத்தார். அதுவரை நத்தம் விஸ்வநாதனை கைது செய்யக்கூடாது என்றும் தடை விதித்திருந்தார். இந்நிலையில் முன்ஜாமின் கேட்டு நத்தம் விஸ்வநாதனும் மதுரை ஹைகோர்ட் கிளையில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி நத்தம் விஸ்வநாதனுக்கு முன்ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications