மீனாட்சி அம்மன் கோவிலில் பக்தர்கள் செல்போன் எடுத்துச் செல்ல தடை... நீதிமன்றம் உத்தரவு!
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பக்தர்கள் செல்போன் எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
மதுரை : மீனாட்சி அம்மன் கோவிலில் பக்தர்கள் செல்போன் எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அதிகாரிகள் தவிர கோவிலுக்குள் வேறு யாரும் செல்போன் எடுத்து செல்லக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கடந்த 2ம் தேதி இரவு நடந்த தீ விபத்தையடுத்து அங்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இன்று மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் பக்தர்கள் செல்போன் எடுத்து செல்ல சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் கிருபாகரன், தாரணி அடங்கிய அமர்வு தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதிகாரிகள் தவிர வேறு யாரும் செல்போன் எடுத்துச் செல்லக் கூடாது என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர். மேலும் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு மத்திய படை பாதுகாப்பு வழங்குமாறு தமிழக அரசு மத்திய அரசைக் கோர வேண்டும்.
கோவிலுக்குள் நவீன ரக தீ தடுப்பு சாதனங்களை அமைக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். கோவிலில் இருந்து 1 கி.மீ சுற்றளவில் 9 மீட்டர் உயரத்துக்கு மேல் இருக்கும் கட்டிடங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications