தூத்துக்குடிப் போர்.. மாண்ட தமிழர் எத்தனை பேர்? மனசாட்சியுடன் அறிவிக்குமா அரசு?
தூத்துக்குடியில் போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் மாண்ட தமிழர்கள் எத்தனை பேர் என்பது தெளிவாக தெரியவில்லை.
Recommended Video

சென்னை: தூத்துக்குடியில் அப்பாவி மக்கள் மீது தமிழக போலீசார் கட்டவிழ்த்துவிட்ட போரில் மாண்டு போனது 11 பேரா? 9 பேரா ? படுகாயம் அடைந்தது எத்தனை பேர்? என்கிற அடிப்படை விவரத்தைக் கூட அரசு தரப்பில் இன்னமும் தெரிவிக்காதது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வாழ்வாதார உரிமைக்காக, எதிர்கால சந்ததியைக் காப்பாற்ற நாசகார ஸ்டெர்லைட் ஆலையை இழுத்து மூடு என்பது தூத்துக்குடி சுற்றுவட்டார மக்களின் கோரிக்கை. இதனை அரசுகள் 100 நாட்களாக கண்டுகொள்ளாத நிலையில் அறிவித்தபடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட அமைதிவழியில் 5 கிலோ மீட்டர் பேரணியாக வந்தனர்.

சரிந்து விழுந்த உயிர்கள்
போலீசாரின் அத்தனை தடைகளையும் உடைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்குள் உள்ளே நுழைந்த வினாடிகளில் சரமாரி துப்பாக்கிச் சூடுகள்... கொத்து கொத்தாக சரிந்து போய் விழுகின்றன உயிர்கள்...

எண்ணிக்கை எதுவும் தெரியாது
இந்திய வரலாற்றிலேயே இல்லாத வகையில் மார்புகளை குறி பார்த்து உயிர் பிழைத்துவிடக் கூடாது என இலக்கு வைத்து அத்தனை பேரும் படுகொலை செய்யப்பட்டனர். படுகொலை செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கையைத் தெரிவிப்பதில் கூட தமிழக அரசும் ஆளுநரும் முரண்படுகின்றனர். ஆளுநரோ 11 பேர் பலியாகிவிட்டனர் என்கிறார்; முதல்வரோ 9 பேர்தான் பலி என்கிறார். படுகாயமடைந்தவர் எண்ணிக்கை யாருக்கும் தெரியாது? கவலைக்கிடம் எத்தனை பேர் யாருக்கும் தெரியாது?

இன்று தூத்துக்குடியா?
குரங்கணி காட்டுத் தீ விபத்தில் இப்படித்தான் ஒற்றை இலக்கில் பலி எண்ணிக்கை தொடங்கியது.. ஆனால் அது 20 ஐ தாண்டி நின்றது. தூத்துக்குடியில் பலியானோர் எண்ணிக்கை முதலிலேயே 6,7 என தொடங்கியது இப்போது 23 வரை சொல்கிறார்கள்.

பலியும் கவலைக்கிடமும்தான் எத்தனை?
படுகாயமடைந்தவர்கள் 100-க்கும் மேற்பட்டோர் என கூறப்படுகிறது. இவர்களில் பலரும் கவலைக் கிடம் என்கிறது தூத்துக்குடி செய்திகள். உண்மையில் தூத்துக்குடியில் படுகொலை செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கையை எப்போதுதான் பகிரங்கமாக அரசு சொல்லும்? குரங்கணி போல் மூடி மறைக்காமல் உண்மையை உலகுக்கு சொல்லுமா அரசு? என்பதுதான் கேள்வி.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications