சேலம் அருகே மனைவி தலையில் கல்லை போட்டு கொன்ற கணவன்! பெற்ற பிள்ளைகள் கண்முன்னே வெறிச்செயல்!
பிள்ளைகள் கண்முன்னே மனைவியை கொன்ற கணவனை போலீசார் கைது செய்துள்ளனர்.
Recommended Video

சேலம்: சேலம் அருகே குடும்ப தகராறு காரணமாக பிள்ளைகள் முன்னிலையிலேயே மனைவியின் தலையில் கணவன் கல்லை தூக்கிப் போட்டு கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் நெய்காரப்பட்டியில் உள்ள மேட்டுத்தெருவில் வசித்து வருபவர் சரவணன். இவர் ஒரு கூலி தொழிலாளி. இவரது மனைவி பரமேஸ்வரி. இந்த தம்பதியினருக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். சரவணன் சரியாக வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார்.

இதனால் இவர்களுக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. மேலும் அடிக்கடி பரமேஸ்வரியின் தாய் வீட்டிலிருந்து பணம் வாங்கி வரச்சொல்லி கொடுமைப்படுத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று சரவணன் குடிபோதையில் இருந்துள்ளார். இதனையடுத்து இருவருக்கும் இடையே வழக்கம்போல் குடும்ப தகராறு முற்றியது. இதில், சரவணன் மனைவி பரமேஸ்வரி தலையின் மீது கல்லை தூக்கிப் போட்டுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே பரமேஸ்வரி ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார். இதை கண்கூடாக பார்த்து இரண்டு குழந்தைகளும் கதறி அழுதனர்.
இந்தக் கொலை சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த கொண்டலாம்பட்டி காவல்துறையினர் சரவணனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications