கமலின் அரசியல் கருத்துக்களை புரிந்துகொள்ள காலஅவகாசம் தேவை- பொன். ராதாகிருஷ்ணன்
ஊழல் குறித்த நடிகர் கமல்ஹாசனின் பேச்சு அவருடைய தனிப்பட்ட கருத்து என்று மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
மதுரை: நடிகர் கமல்ஹாசன் கூறும் அரசியல் கருத்துக்களை புரிந்துகொள்ள எனக்கு காலஅவகாசம் தேவை என்று பொன். ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். கமலின் ஊழல் குறித்த பேச்சு அவருடைய தனிப்பட்ட கருத்து என்றும் தெரிவித்துள்ளார்.
கமலின் டுவிட்டுகள், கருத்துக்களுக்கு பாஜக தமிழக தலைவர்கள், காட்டமான கருத்துக்களை கூறி வருகின்றன. எச். ராஜா ஒருமையில் பேசியதோடு முதுகெலும்பில்லாதவர் கமல் என்றெல்லாம் கூறி வசைபாடினார். அதற்கு எலும்பு டாக்டர் எச். ராஜா என்று பதிலடி கொடுத்தார் கமல்ஹாசன்.

இதனிடையே கமலின் அரசியல் கருத்து குறித்து மதுரை வந்த மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், நடிகர் கமல்ஹாசன் கூறும் அரசியல் கருத்துக்களை புரிந்துகொள்ள எனக்கு காலஅவகாசம் தேவை என்றார்.
ஊழல் குறித்த நடிகர் கமல்ஹாசனின் பேச்சு அவருடைய தனிப்பட்ட கருத்து என்றும் தெரிவித்தார். மேலும் வரும் 27ஆம் தேதி அப்துல் கலாம் நினைவு மண்டபத்தை பிரதமர் மோடி திறந்து வைப்பார் என்று பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.
கமலின் கருத்துக்களை புரிந்து கொள்ள மத்திய அமைச்சருக்கே கால அவகாசம் தேவையென்றால் பாமர மக்களின் பாடு பாவம்தான் போல.












Click it and Unblock the Notifications