தமிழக நலன்களுக்கு தொடர்ந்து குரல் கொடுப்பேன... நடிகர் சத்யராஜ் அதிரடி!
தமிழக நலன்களுக்கு தொடர்ந்து குரல் கொடுப்பேன் என நடிகர் சத்யராஜ் தெரிவித்துள்ளார்.
சென்னை: தமிழக நலன்களுக்கு தொடர்ந்து குரல் கொடுப்பேன் என நடிகர் சத்யராஜ் தெரிவித்துள்ளார். அதேநேரத்தில் நான் கர்நாடக மக்களுக்கு எதிரானவன் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
பாகுபலி படத்தில் நடிகர் சத்யராஜ் கட்டப்பா கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த கதாப்பாத்திரம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
படத்தின் நாயகனான பாகுபலியை கொலை செய்வதுதான் கட்டப்பா கதாப்பாத்திரம். இந்தப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் உருவாக்கப்பட்டுள்ளது.

போராட்டங்களில் சத்யராஜ்
இந்நிலையில் காவிரி பிரச்சனை தொடர்பாக தமிழகத்தில் நடைபெறும் போராட்டங்களில் பங்கேற்கும் நடிகர் சத்யராஜ் கர்நாடகத்துக்கு எதிராக பேசியிருந்தார். அண்மையில் கர்நாடகாவுக்கு எதிராக நடைபெற்ற உண்ணாவிரதத்திலும் சத்யராஜ் கலந்து கொண்டார்.

28ஆம் தேதி போராட்டம்
இதனால் சத்யராஜ் நடித்த பாகுபலி - 2 படத்தை கர்நாடகாவில் ரிலீஸ் செய்ய வெட்டுவால் நாகராஜ் தலைமையிலான குழு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. சத்யராஜ்க்கு எதிராக வரும் 28ஆம் தேதி போராட்டம் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சத்யராஜ் வருத்தம்
படத்தின் இயக்குநரான ராஜமவுளி பாகுபலி படத்தை வெளியிட அனுமதிக்குமாறு கோரிக்கை விடுத்து வீடியோ வெளியிட்டிருந்தார். இந்நிலையில் படத்தை வெளியிட அனுமதிக் கோரியும், கன்னடர்கள் குறித்த தனது பேச்சுக்காக வருத்தம் தெரிவித்தும் சத்யராஜ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளளார்.

கன்னடர்களுக்கு எதிரானவன் அல்ல
அதில் நான் கர்நாடக மக்களுக்கு எதிரானவன் அல்ல என நடிகர் சத்யராஜ் விளக்கம் அளித்துள்ளார். பாகுபலி - 2 படத்தை வெளியிட கன்னட மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றும் சத்யராஜ் கோரிக்கை விடுத்துள்ளார்.

படக்குழு பாதிப்பு
கன்னடர்கள் குறித்த தனது பேச்சு வருத்தத்தை ஏற்படுத்தியிருந்தால் அதற்காக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் சத்யராஜ் தனது விளக்க அறிக்கையில் கூறியுள்ளார். தான் ஒருவனால் ஒட்டு மொத்த படக்குழுவும் பாதிக்கப்படுவதை தான் விரும்பவில்லை என்றும் சத்யராஜ் கூறியுள்ளார்.

தொடர்ந்து குரல் கொடுப்பேன்
மேலும் தமிழக நலன்களுக்காக தொடர்ந்து குரல் கொடுப்பேன் என்றும் சத்யராஜ் தனது அறிக்கையில் தெளிவு படுத்தியுள்ளார். நடிகனாக இருப்பதை விட தமிழனாக இருப்பதில் பெருமை கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார்
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications