திமுகவினர் மதுபான ஆலை நடத்துவதாக கனிமொழி கூறியது ஏன்? அன்புமணி கிடுக்கிப்பிடி
சென்னை: திமுகவினர் நடத்தும் மதுபான ஆலைகளை மூட நடவடிக்கை எடுப்பதாக கனிமொழி கூறிய நிலையில், திமுகவினர் யாருமே, மதுபான ஆலை நடத்தவில்லை என கருணாநிதி கூறியுள்ளது குறித்து, பாமக முதல்வர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து அன்புமணி வெளியிட்ட டிவிட்டில், திமுக ஆட்சிக்கு வந்தால், திமுக புள்ளிகள் நடத்தும் மதுபான தொழிற்சாலைகளை மூட நடவடிக்கை எடுப்பேன் என்று 2ஜி சகோதரி (கனிமொழியை குறிப்பிடுகிறார்) கூறியது ஏன், என்று ஸ்டாலின் பதிலளிப்பாரா? என்று அன்புமணி தெரிவித்துள்ளார்.

இதையடுத்து வெளியிட்டுள்ள மற்றொரு டிவிட்டில், கலைஞர் திமுக, மு.க.ஸ்டாலின் திமுக, கனிமொழி திமுக என மொத்தம், 3 திமுக உள்ளதா என சந்தேகம் கிளப்பும் வகையில் மதுபான ஆலை பற்றிய தகவல்கள் வெளியிடப்படுகின்றன என்றும் அன்புமணி சாடியுள்ளார்.
#DMK Liquor factory statements. Are there 3 DMKs? That of Kalaignar, MKS, Kani?
— Dr ANBUMANI RAMADOSS (@draramadoss) April 28, 2016
ஆட்சிக்கு வந்தால், திமுக பிரமுகர்கள் நடத்தும், மதுபான ஆலைகள் மூடப்படும் என்று திமுக மகளிர் அணி செயலாளர் கனிமொழி கூறியதாக சில தினங்கள் முன்பு ஊடகங்களில் செய்தி வெளியாகியிருந்தது. இந்நிலையில், நேற்று கருணாநிதி கூறுகையில் திமுக பிரமுகர்கள் யாரும் மது ஆலை நடத்தவில்லை என்று தெரிவித்திருந்தார்.












Click it and Unblock the Notifications