விமான நிலையத்தில் அப்பாவி பெண்ணைக் கைது செய்த வழக்கு... ஹைகோர்ட்டில் ஆஜரான குடியுரிமை அதிகாரி
சென்னை: சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் அப்பாவிப் பெண் ஒருவர் தவறுதலாக கைது செய்யப்பட்ட சம்பவத்தில் விமான நிலைய குடியுரிமை அதிகாரி இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆஜரானார்.
சென்னை சேலையூரை சேர்ந்த கேவீன் ஜான் சஜித் என்பவர் தாக்கல் செய்த ஆள் கொணர்வு மனுவில், "என் தாயார் சாரா தாமஸ் வெளி நாட்டில் இருந்து கடந்த அக்டோபர் 29 ஆம் தேதி விமானம் மூலம் மீனம்பாக்கம் விமான நிலையத்துக்கு வந்து இறங்கினார்.
அவரை அங்குள்ள குடியுரிமை அதிகாரிகள் , கேரளா மாநிலம் புனலூர் போலீசார், சென்னை விமான நிலையம் போலீசார் ஆகியோர் கைது செய்தனர். பின்னர், கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் ஜெயிலில் அடைத்து விட்டனர்.
அப்போது என் தாயார் மீது கிரிமினல் வழக்கு உள்ளதாக போலீசார் கூறியுள்ளனர். ஆனால் என் தாயார் மீது எந்த ஒரு வழக்கும் இல்லை. அவரை சட்டவிரோதமாக ஜெயிலில் அடைத்துள்ளனர்" என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில், கடந்த 13 ஆம் தேதி புனலூர் குற்றவியல் கோர்ட்டில் சாரா தாமஸ் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, அவர் மீது கிரிமினல் வழக்குகள் எதுவும் இல்லை என்றும் கிரிமினல் வழக்கில் தேடப்படும் சாரா வில்லியம்ஸ் என்ற பெண்ணை கைது செய்வதற்கு பதில் சாரா தாமசை போலீசார் கைது செய்துள்ளது தெரியவந்தது. இதையடுத்து அவரை புனலூர் கோர்ட் விடுவித்து உத்தரவிட்டது.
இந்த நிலையில், சாரா தாமஸ் மகன் தாக்கல் செய்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் 25 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது.
மனுவை விசாரித்த நீதிபதிகள் எஸ்.தமிழ்வாணன், டி.மதிவாணன் ஆகியோர், சாரா தாமசை போலீசார் கைது செய்ததற்கு முக்கிய காரணம் விமான நிலையத்தில் மூத்த குடியுரிமை அதிகாரிதான் என்று மனுதாரர் சார்பில் வாதிடப்பட்டது. எனவே, அந்த மூத்த குடியுரிமை அதிகாரி நேரில் ஆஜராகவேண்டும் என்று உத்தரவிட்டனர்.
இந்த நிலையில், இந்த வழக்கு இன்று நீதிபதிகள் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தின் மூத்த குடியுரிமை அதிகாரி ஆர்.என்.சிங் நேரில் ஆஜரானார்.
அவர்தான் மூத்த குடியுரிமை அதிகாரி என்பதை உறுதி செய்யும் விதமாக அவர் பிரமாணப் பத்திரத்துடன் இந்த வழக்கிற்கு பதில் மனுவை தாக்கல் செய்யவேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டார்கள். அதன் பின்னர் வழக்கு விசாரணையை டிசம்பர் 1 ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications