அம்மாடி.. இவ்ளோ பேரு தீபாவளிக்கு ஊருக்குப்போறாங்களா!
தீபாவளி பண்டிகை சிறப்பு பஸ்களுக்கு ஒரேநாளில் 1.25 லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளனர்.
சென்னை: தீபாவளி பண்டிகை சிறப்பு பஸ்களுக்கு ஒரேநாளில் 1.25 லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளனர்.
தீபாவளி பண்டிகை வரும் புதன் கிழமை கொண்டாடப்படுகிறுது. இதற்காக சொந்த ஊர் செல்லும் மக்களின் வசதிகளுக்காக சென்னை உட்பட அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
பயணிகள் வசதிக்காக தமிழக அரசு சார்பில் 11,200 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. சென்னையில் சிறப்பு பஸ்கள் 5 இடங்களில் இருந்து புறப்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நேற்று முதல் முன்பதிவு
கோயம்பேடு, அண்ணா நகர், பூந்தமல்லி, சைதாப்பேட்டை, தாம்பரம் சாணிடோரியம் ஆகிய பகுதிகளில் இருந்து நாளை முதல் 17-ந் தேதி வரை இயக்கப்படுகின்றன. சிறப்பு பஸ்களுக்கான முன்பதிவு நேற்று முதல் தொடங்கியுள்ளது.

டிக்கெட் முன்பதிவு
கோயம்பேடு பஸ் நிலையத்தில் 26 முன்பதிவு கவுண்டர்கள், பூந்தமல்லியில் ஒரு கவுண்டரும், தாம்பரம் சாணிடோரியத்தில் 2 கவுண்டரும் திறக்கப்பட்டுள்ளன.பிற மாவட்டங்களிலும் முன்பதிவு மையங்களில் வரிசையில் நின்று மக்கள் டிக்கெட் முன்பதிவு செய்கின்றனர்.

சென்னையில் இருந்து
நேற்று காலை முதல் இன்று காலை 9.30 மணி வரை ஒரு லட்சத்து 16 ஆயிரத்து 89 பேர் முன்பதிவு செய்துள்ளனர். இதில் சென்னையில் இருந்து மட்டும் 67,738 பேர் பயணம் செய்ய முன்பதிவு செய்தனர்.

பிற மாவட்டங்களிலும்
13-ந்தேதி தமிழகம் முழுவதும் 19,739 பேரும் சென்னையில் இருந்து செல்ல 9,566 பேரும் முன் பதிவு செய்துள்ளனர். 14-ந்தேதி சென்னையில் இருந்து 9,540 பேரும், பிற மாவட்டங்களில் இருந்து செல்பவர்கள் 17,534 பேரும் டிக்கெட் பெற்றுள்ளனர்.

நாட்கள் முன்பதிவு
15-ந்தேதி பயணம் செய்வதற்கு 15,071 பேர் முன்பதிவு செய்திருக்கிறார்கள். இதில் சென்னையில் இருந்து செல்ல 7,607 பேர் டிக்கெட் பெற்றுள்ளனர். 16-ந்தேதி 31,284 பேர் முன்பதிவு செய்துள்ளனர்.

17ஆம் தேதி கூட்டம்
இதில் சென்னையில் இருந்து செல்ல 19,973 பேர் முன்பதிவு செய்துள்ளனர்.17-ந்தேதி பயணம் செய்ய 32,461 பேர் முன்பதிவு செய்ததில் சென்னையில் இருந்து மட்டும் முன்பதிவு செய்தவர்கள் 21,052 பேர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications