தமிழகத்திலேயே முதல் முறையாக குற்ற வழக்கில் ஆளில்லாத விமானத்தைப் பயன்படுத்திய போலீஸ்
தமிழகத்திலேயே முதல் முறையாக குற்ற வழக்கில் ஆளில்லாத விமானத்தைப் பயன்படுத்திய போலீஸ்
சென்னை: தமிழகத்திலேயே முதல் முறையாக ஒரு குற்ற வழக்கில் ஆளில்லாத விமானத்தை பயன்படுத்தியுள்ளது காவல்துறை.
சென்னை அருகே பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுக் கொலை செய்யப்பட்ட டிசிஎஸ் நிறுவன பெண் சாப்ட்வேர் என்ஜீனியர் உமா மகேஸ்வரி கொல்லப்பட்ட இடத்தில் நடந்த புலனாய்வு விசாரணையை ஆளில்லாத விமானம் மூலம் வீடியோவில் படமாக்கியுள்ளது போலீஸ்.
மேலும் இந்த கொலை நடந்த பகுதி முழுவதையும் இந்த விமானத்தை வைத்து ஆய்வும் நடத்தியுள்ளது போலீஸ்.

அடர்ந்த புதர்ப் பகுதி
உமா மகேஸ்வரியின் அழுகிய உடல் கிடந்த பகுதி அடர்ந்த புதர்கள் மண்டிக் கிடக்கும் இடமாகும். எனவே ஆட்களை அனுப்பி அங்கு ஆய்வு நடத்துவது சிரமம் என்பதால் ஆளில்லாத விமானத்தை பயன்படுத்தியுள்ளது போலீஸ்.

க்ளூ கிடைக்குமா என்று ஆய்வு
மேலும் இந்த ஆய்வின்போது ஏதாவது துப்பு, தடயம் கிடைக்கிறதா என்பதையும் இந்த விமானத்தைக் கொண்டு ஆராய்ந்துள்ளது போலீஸ்.

200 மீட்டர் தூரத்தில்
டிசிஎஸ் நிறுவனத்திலிருந்து 200 மீட்டர் தூரத்தில்தான் உமா மகேஸ்வரியின் உடல் புதர் பகுதியில் கிடந்தது. பிப்ரவரி 13ம் தேதி அவர் காணாமல் போனார்.

3 டி படமாக்கி ஆய்வு
தற்போது இந்த விமானம் மூலம் எடுக்கப்பட்ட படங்களை ஆய்வு செய்து வருகிறது போலீ்ஸ். மேலும் அதை 3டி முறையில் படமாக மாற்றியும் ஆய்வு செய்யவுள்ளனர்.

சட்டவிரோத கிரானைட் வழக்கில்
இதற்கு முன்பு மதுரையில் சட்டவிரோதமான முறையில் நடந்து வரும் கிரானைட் நிறுவன வழக்கில் ஆளில்லாத விமானங்களைப் பயன்படுத்தி கிரானைட் சுரங்கங்கள் ஆய்வு செய்யப்பட்டன. அதன் பிறகு தற்போது ஆளில்லாத விமானத்தை ஒரு வழக்கில் பயன்படுத்தியுள்ளனர்.

பரமக்குடியிலும்
இதேபோல பசும்பொன் கிராமத்தில் தேவர் ஜெயந்தி நடந்த சமயத்திலும், இம்மானுவேல் சேகரன் நினைவாஞ்சலி நிகழ்ச்சியின்போதும் ஆளில்லாத விமானத்தை பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புக்காக காவல்துறை பயன்படுத்தியுள்ளது.

10 கிலோ எடை கொண்டது
சென்னைகொலை வழக்கில் ஆய்வுக்காக பயன்படுத்தப்பட்ட ஆளில்லாத விமானமானது 10 கிலோ எடை கொண்ட குட்டியூண்டு விமானமாகும். மொத்தம் 6 மணி நேரம் அது பறந்து வீடியோ படம் எடுத்துள்ளது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications