சிவகங்கையில் மின்சாரக் கம்பியில் சிக்கி சிறுவன் உயிரிழந்த துயரம்! - வீடியோ
சிவகங்கை அருகே மணலூரில் சிறுவன் லிங்கேஸ்வரன் உயர் அழுத்த மின்கம்பியில் சிக்கி உயிரிழந்தான்.
Subscribe to Oneindia Tamil
சிவகங்கை: வீட்டின் மொட்டை மாடியில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் எதிர்பாராதவிதமாக உயர் அழுத்த மின்கம்பியில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கையை அடுத்த மணலூரைச் சேர்ந்தவர் ஜெயமுத்து. இவர் ஒரு தனியார் தொழிற்சாலையில் காவலராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மகன் தொடக்கப்பள்ளியில் படித்து வந்தான்.

சம்பவத்தன்று லிங்கேஸ்வரன் மொட்டைமாடியில் விளையாடிக்கொண்டிருந்தான். அப்போது எதிர்பாராத விதமாக அவன் உயர் அழுத்த மின் கம்பியில் சிக்கிக் கொண்டான். உடனே நொடியில் சிறுவனின் உடலில் மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக உயிரிழந்தான்.
இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதையடுத்து, போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications