வாட்ஸ்அப்பில் வந்த வதந்தி.. மதுரை கூட்டுறவு வங்கி முன்பு குவிந்த பத்திரிக்கையாளர்கள்!
மதுரை தபால் நிலையம் அருகே உள்ள மத்திய கூட்டுறவு வங்கியில் நேற்று மதியம் 3 மணியில் இருந்து வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டதாக வாட்ஸ்அப் மூலம் தகவல் பரவியது.
மதுரை: மதுரை தபால் நிலையம் அருகே உள்ள மத்திய கூட்டுறவு வங்கியில் நேற்று மதியம் 3 மணியில் இருந்து வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டதாக வாட்ஸ்அப் மூலம் தகவல் பரவியது.
இதனை அறிந்த பத்திரிகையாளர்கள் அந்த வங்கியின் முன்பு கேமிரா சகிதமாக குவிந்தனர்.

நீண்ட நேரம் காத்திருந்த பத்திரிக்கையாளர்கள் வங்கியின் முன்பு வருமான வரித்துறை அதிகாரிகள் வந்த மாதிரியான வாகனங்கள் தென்படாததால் சந்தேகமடைந்தனர். இது குறித்து வங்கியில் இருந்த தலைவர் புதூர் துரைப்பாண்டியை தொடர்பு கொண்டு கேட்டபோது, அந்த மாதிரி எதுவும் நடக்கவில்லை என்று கூறிய அவர், ரெய்டு என வதந்தியை பரப்பிவிட்டுள்ளனர் என்றார்.
இதைத்தொடர்ந்து வங்கியின் நிர்வாக இயக்குநர் சந்திரசேகரன், உயர் அதிகாரிகள் வங்கிக்கு வந்தனர். அவர்கள் நவம்பர் 8ஆம் தேதிக்குப் பிறகு வங்கியில் டெபாசிட் செய்யப்பட்ட விவரங்கள் மற்றும் அதற்கு முந்தைய பரிமாற்றம் தொடர்பான விவரங்களையும் வாங்கிச் சென்றனர் என்றார்.
வதந்திக்குள்ளான வங்கியில் ஒரே நாளில் ரூபாய் 7.5 கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்தப் பணம் ஆளும் கட்சி அமைச்சருக்கு சொந்தமானது என்ற தகவல் அறிந்த உயர் அதிகாரிகள்,
இதுகுறித்து ஆய்வு செய்ய கம்ப்யூட்டர் பதிவுகளை வாங்கிச் சென்றதாக வங்கி ஊழியர்கள் தெரிவித்தனர்.
மேலும், சேலம், கடலூர் கூட்டுறவு வங்கிகளில் நடந்த சோதனை மற்றும் மதுரை கூட்டுறவு வங்கியில் டெபாசிட் செய்யப்பட்ட பணம் குறித்த சர்ச்சைகள் தொடர்பாக கூட்டுறவுத்துறை அமைச்சர் விரைவில் பத்திரிகையாளர்களை சந்திப்பார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications