கையில் மை.. தினம் ஒரு உத்தரவு.. மக்களை கஷ்டப்படுத்தும் மத்திய அரசு.. திருநாவுக்கரசர் கண்டனம்
தினம் ஒரு உத்தரவு போட்டு மக்களை கஷ்டப்படுத்திக் கொண்டிருக்கிறது மத்திய அரசு என்று திருநாவுக்கரசர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை: கறுப்புப் பணத்தை ஒழிக்கிறேன் என்று சொல்லிக் கொண்டு தினம் ஒரு உத்தரவு போட்டு மக்களை கஷ்டப்படுத்திக் கொண்டிருக்கிறது மத்திய அரசு என்று தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் திருநாவுக்கரசர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கடந்த 9ம் தேதியில் இருந்து 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டது. அதில் இருந்து மக்கள் கையில் பணம் இல்லாமல் தவித்து வருகின்றனர். பழைய நோட்டுகளை நீண்ட வரிசையில் நின்று பழைய நோட்டுக்களை மாற்றி வருகின்றனர். மேலும், ஏடிஎம் மையங்களும் முழுமையாக செயல்பாடாமல் இருப்பதால் திறந்திருக்கும் சில ஏடிஎம் மையங்களில் மக்கள் இரவும் பகலுமாக காத்துக்கிடக்கிறார்கள்.

பணத்தை எடுக்கவே நீண்ட வரிசையில் இருக்கும் மக்களுக்கு இனி பணத்தை மாற்றியதற்கான அடையாளமாக இன்றிலிருந்து கையில் அழியாத மை வைக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கு மக்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர் இதுகுறித்து பேசும்போது, "தினம் தினம் ஒரு உத்தரவு போட்டு சாதாரண மக்கள் மீது அரசு சுமையை ஏற்றி வருகிறது. அது ஏன் என்பது தெரியவில்லை. இந்த மை எத்தனை நாட்கள் கையில் இருக்கும். மீண்டும் எப்போது பணம் எடுக்கப் போகலாம் என்பது குறித்தெல்லாம் ஒரு தெளிவும் இல்லை. இதனால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். கை, முதுகு என மை வைத்துக் கொண்டே இருந்தால் எப்போதுதான் தீர்வு" என்று கூறியுள்ளார்.
ஒருவரே திரும்ப திரும்ப வங்கிகளுக்குச் சென்று பழைய நோட்டுக்களை மாற்றி வருவதாகவும், இதனை தடுக்கவே பணத்தை மாற்றுவோர் கையில் அழியாத மை வைக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் சக்திகாந்த தாய் தெரிவித்துள்ளார். என்றாலும், ஏற்கனவே ஆங்கிலத்தில் உள்ள படிவத்தை பூர்த்தி செய்து நீண்ட வரிசையில் நின்று தங்களிடம் உள்ள பழைய நோட்டுகளை மாற்றிச் செல்லும் மக்களுக்கு இது புதிய தலைவலியாக மாறியிருக்கிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications