விடுதலை புலிகள் மீது தடையை நீக்க அனைத்து நாடுகளும் நீக்க வேண்டும்: சுப.வீரபாண்டியன்
இந்தியாவில் விடுதலை புலிகள் இயக்கத்தின் மீதான தடையை நீட்டித்துக்கொண்டே இருப்பது தேவையற்ற உள்அரசியலின் வெளிப்பாடு என திராவிடர் இயக்க தமிழர் பேரவையின் தலைவர் சுப.வீர பாண்டியன் கூறியுள்ளார்.
சென்னை: தமீழிழ விடுதலை புலிகள் இயக்கத்தின் மீதான தடையை இந்தியா எப்போதோ நீக்கியிருக்க வேண்டும். உள் அரசியலால் அது நடக்கவில்லை என திராவிட இயக்க தமிழர் பேரவையின் தலைவர் சுப.வீர பாண்டியன் கூறியுள்ளார்.
இதுகுறித்து திராவிட இயக்க தமிழர் பேரவையின் தலைவர் சுப.வீரபாண்டியன் கூறியதாவது:
Recommended Video
ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதிருந்த தடையை நீக்கியது மகிழ்ச்சியளிக்கிறது. இதை இந்தியா எப்போதோ செய்திருக்க வேண்டும்.
ஆனால், எந்த காரணங்களும் இன்றி, விடுதலை புலிகள் இயக்கத்தின் மீதான தடையை நீட்டித்துக்கொண்டே இருப்பது தேவையற்ற உள்அரசியலின் வெளிப்பாடு.
ஐரோப்பிய யூனியனின் இந்த தடை நீக்க நடவடிக்கை மற்ற நாடுகளுக்கு முன் உதாரணமாக இருக்கும். அதன் எதிரொலியாக மற்ற நாடுகளும் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடையை நீக்கும் என நம்புகிறேன்.
இவ்வாறு சுப.வீரபாண்டியன் கூறினார்.