நாட்டிலேயே முதன்முறையாக பொதுத் தேர்வெழுதிய திருநங்கை தாரிகா வெற்றி பெற்று சாதனை!
நாட்டிலேயே முதன்முறையாக பொதுத்தேர்வு எழுதிய திருநங்கை தாரிகா பானு தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளார்.
சென்னை : சென்னையை அடுத்த அம்பத்தூர் அரசுப் பள்ளியில் பயின்று வந்த திருநங்கை தாரிகா பானு பிளஸ் 2 பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார்.
தமிழகம் மற்றும் புதுவையில் கடந்த மார்ச் 2ம் தேதி தொடங்கி மார்ச் 31ம் தேதி வரை நடைபெற்ற பிளஸ் 2 பொதுத்தேர்வை சுமார் 9 லட்சத்து 30 ஆயிரம் பேர் தேர்வு எழுதினர். இவர்களுடன் திருநங்கை ஒருவரும் பொதுத்தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றுள்ளதால் அவர் தற்போது மீடியா வெளிச்சத்திற்குள் வந்துள்ளார்.

சென்னை அம்பத்தூர் காமராஜர் அரசுப் பள்ளியில் மாவட்ட ஆட்சியர், கல்வி அலுவலரின் அனுமதியோடு மிகுந்த போராட்டத்திற்கு பிறகு மூன்றாம் பாலினத்தவர் என்று சொல்லப்படும் திருநங்கை தாரிகாபானு மேல்நிலைப் படிப்பிற்காக பள்ளியில் சேர்ந்தார். பொதுத் தேர்வில் தாரிகா பானு வெற்றி பெற்றதை சக மாணவிகளுடன் கொண்டாடி மகிழ்ந்தார் தாரிகா.
நாட்டிலேயே முதன்முறையாக பொதுத்தேர்வில் பங்குபெற்று தேர்ச்சி பெற்ற மாணவி என்பதால் மிகவும் மகிழ்ச்சியடைவதாக தாரிகா தெரிவித்தார். திருநங்ககைகள் பாலியல் தொழிலுக்கும், பிச்சை எடுக்கவும் மட்டுமே செய்வார்கள் என்பதை மாற்றவே கடுமையான போராட்டத்திற்கு பிறகு பள்ளியில் சேர்ந்து தேர்ச்சி பெற்றுள்ளதாகவும், மருத்துவம் சேர்ந்து படிக்கவே தான் விரும்புவதாகவும் அவர் கூறினார்ர.
மூன்றாம் பாலின மாணவர்களை சேர்த்துக் கொள்ள தங்கள் பள்ளி எப்போதும் தயாராக இருப்பதாக அந்தப் பள்ளியின் தலைமைஆசிரியர் நெகிழ்ந்தார். சம மாணவிகள் திருநங்கை தாரிகாவை பாகுபாடின்றி நடத்தியதோடு ஆசிரியர்களும் வேறுபாடுகளின்றி பாடம் பயிற்றுவித்ததன் விளைவாகவே திருநங்கை மாணவி தாரிகா பானு வெற்றியை எட்ட முடிந்ததாகவும் அவர் பாராட்டு தெரிவித்தார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications