தர்மபுரி மருத்துவமனையில் சிகிச்சை பெறும் குழந்தைகள் உடல் நிலையில் முன்னேற்றம்: டீன்
தர்மபுரி: தொடர் உயிரிழப்புகளால் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவிலுள்ள 4 குழந்தைகளும் நலமாக உள்ளதாக மருத்துவமனை டீன் டாக்டர் நாராயண பாபு தெரிவித்தார்.

கடந்த 14ம்தேதி முதல் 17ம்தேதிக்கு இடைப்பட்ட காலத்தில், தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகள் 11 பேர் பரிதாபமாக பலியாகினர். இதையடுத்து சேலம் உள்ளிட்ட பிற நகர மருத்துவமனைகளுக்கு குழந்தைகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளன. தர்மபுரி மருத்துவமனையில் தற்போது 4 குழந்தைகள் குழந்தைகளுக்கான ஐசியூவில் வைக்கப்பட்டுள்ளன. அவர்களின் நிலை குறித்து மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் டீன் டாக்டர் நாராயண பாபு அளித்த பேட்டி:
தர்மபுரி மருத்துவமனையில் உள்ள 4 குழந்தைகளுக்கு மூச்சு திணறல் காரணமாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவை அனைத்தும் சமீபத்தில் பிறந்த பச்சிளம் குழந்தைகள் என்பதால் குழந்தைகளுக்கான ஐசியூவில் வைக்கப்பட்டுள்ளன. வென்டிலேட்டர் மற்றும் இன்குபேட்டர் ஆகிய வசதிகள் நான்கு குழந்தைகளுக்கும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
சிகிச்சையில் நல்ல முன்னேற்றம் காணப்படுகிறது. சிகிச்சையை குழந்தைகளின் உடல் ஏற்கத் தொடங்கியுள்ளது. இன்னும் 24 மணி நேரம் அல்லது 32 மணி நேரத்திற்குள் குழந்தைகள் வென்டிலேட்டரில் இருந்து வெளியே கொண்டுவரப்பட்டு வழக்கமான வார்டில் தங்க வைக்கப்படுவார்கள். இவ்வாறு நாராயண பாபு தெரிவித்தார்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications