தர்மபுரி மருத்துவமனையில் சிகிச்சை பெறும் குழந்தைகள் உடல் நிலையில் முன்னேற்றம்: டீன்
தர்மபுரி: தொடர் உயிரிழப்புகளால் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவிலுள்ள 4 குழந்தைகளும் நலமாக உள்ளதாக மருத்துவமனை டீன் டாக்டர் நாராயண பாபு தெரிவித்தார்.

கடந்த 14ம்தேதி முதல் 17ம்தேதிக்கு இடைப்பட்ட காலத்தில், தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகள் 11 பேர் பரிதாபமாக பலியாகினர். இதையடுத்து சேலம் உள்ளிட்ட பிற நகர மருத்துவமனைகளுக்கு குழந்தைகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளன. தர்மபுரி மருத்துவமனையில் தற்போது 4 குழந்தைகள் குழந்தைகளுக்கான ஐசியூவில் வைக்கப்பட்டுள்ளன. அவர்களின் நிலை குறித்து மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் டீன் டாக்டர் நாராயண பாபு அளித்த பேட்டி:
தர்மபுரி மருத்துவமனையில் உள்ள 4 குழந்தைகளுக்கு மூச்சு திணறல் காரணமாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவை அனைத்தும் சமீபத்தில் பிறந்த பச்சிளம் குழந்தைகள் என்பதால் குழந்தைகளுக்கான ஐசியூவில் வைக்கப்பட்டுள்ளன. வென்டிலேட்டர் மற்றும் இன்குபேட்டர் ஆகிய வசதிகள் நான்கு குழந்தைகளுக்கும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
சிகிச்சையில் நல்ல முன்னேற்றம் காணப்படுகிறது. சிகிச்சையை குழந்தைகளின் உடல் ஏற்கத் தொடங்கியுள்ளது. இன்னும் 24 மணி நேரம் அல்லது 32 மணி நேரத்திற்குள் குழந்தைகள் வென்டிலேட்டரில் இருந்து வெளியே கொண்டுவரப்பட்டு வழக்கமான வார்டில் தங்க வைக்கப்படுவார்கள். இவ்வாறு நாராயண பாபு தெரிவித்தார்.
-
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
திண்டுக்கல் கொடை ரோடு விஏஓ சத்யா கனவிலும் நினைக்காதது.. அரசு ஊழியர்கள் அறிய வேண்டிய பாடம் -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம்












Click it and Unblock the Notifications