வெளிநாட்டுக்காக வேலை பார்த்தாலும்… நாங்களும் தமிழர்கள் தான்.. வீதி இறங்கி போராடும் ஐடி இளைஞர்கள்
வெளிநாட்டுக்காக வேலை பார்த்தாலும், நாங்கள் அனைவரும் தமிழர்கள்தான் என்று கூறி வீதியில் இறங்கி போராடி வருகின்றனர் தரமணியைச் சேர்ந்த ஐ டி நிறுவன ஊழியர்கள். இதனால் தரமணியில் பதற்றம் நிலவி வருகிறது.
சென்னை: ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும், பீட்டா அமைப்பிற்கு எதிராகவும் பதாகைகளை ஏந்தி மனித சங்கிலிப் போராட்டத்தில் தரமணியில் உள்ள ஐடி நிறுவனங்களைச் சேர்ந்த இளைஞர்கள் ஈடுபட்டுள்ளனர்.
பொங்கல் திருவிழாவிற்கு முன் தொடங்கிய ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டம், பொங்கல் முடிந்தும் தமிழகம் முழுவதும் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. சென்னையில் மெரினாவில் நேற்று காலையில் கூடிய மாணவர்கள் தொடர்ந்து பல மணி நேரமாக போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

அதேபோன்று இன்று காலை பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள ஐடி நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் தன்னெழுச்சியாக ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டத்தை நடத்தினார்கள். இவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, தரமணியில் உள்ள ஐ டி நிறுவனத்தைச் சேர்ந்த இளைஞர்கள் தன்னெழுச்சியாக ஒன்று கூடி மனிதச் சங்கிலிப் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதில் பங்கேற்ற ஐடி பெண் ஊழியர், ஜெர்சி மாடு உள்ளிட்ட வெளிநாட்டு மாடுகளில் பால் குடித்ததால்தான் தனக்கு சர்க்கரை நோய் சிறுவயதிலேயே வந்து விட்டது என்றும், நாட்டு மாடுகளின் இனத்தைக் காப்பாற்ற நாம் போராடுவது மிக மிக அவசியம் என்று கூறினார்.
இதேபோன்று வெளிநாட்டுக்காக நாங்கள் வேலை செய்தாலும், தமிழ் மற்றும் தமிழர்களுக்கு ஒன்று என்றால் வீதியில் இறங்கி போராடுவோம் என்று ஐடி ஊழியர்கள் தெரிவித்தனர். இந்தப் போராட்டத்தில் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஐ டி ஊழியர்கள் ஈடுபட்டனர்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications