சென்னை போராட்டத்திற்கு வர விடாமல் தடுத்து கைது செய்யப்பட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள்!
சென்னையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க வந்த ஆசிரியர்கள் ஆங்காங்கே தடுத்துநிறுத்தப்பட்டதால் பல பகுதிகளில் ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை: சென்னையில் அரசுக்கு எதிராக நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க வந்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் வேலூர் சுங்கச்சாவடியில் ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவள்ளூர் ரயில் நிலையத்தில் அரசு ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர்.
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், 8வது ஊதிய மாற்றத்தை அமல்படுத்துவதற்கு முன்னர் 20 சதவீத இடைக்கால நிவாரணத்தை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் ஜூலை மாதம் மாவட்ட தலைநகரங்களில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து அரசு ஊழியர்கள் மற்றம் ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ சார்பில் சென்னைனயில் இன்று இரண்டாவது கட்டமாக பேரணி நடக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் கோட்டை நோக்கி பேரணி செல்ல போலீசார் அனுமதி மறுத்துவிட்டனர்.
இதனையடுத்து சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன் ஆர்ப்பாட்டம் மட்டும் நடத்த ஜாக்டோ ஜியோவுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அமைதியான முறையில் இந்த ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும், ஆர்ப்பாட்ட இடத்தில் வாகனத்தை நிறுத்தக்கூடாது என்று 15 நிபந்தனைகள் ஆர்ப்பாட்டத்திற்கு விதிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க வந்த ஆசிரியர்களின் பேருந்து வேலூர் அருகே தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. சென்னையில் நடைபெறும் ஜக்டோ -ஜியோ ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க செல்வதாகக் கூறியும் போலீசார் ஆசிரியர்களை அனுமதிக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த 500க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் வாலாஜா சுங்கச்சாவடி அருகே போராட்டம் நடத்தினர்.
இதே போன்று திருவள்ளூர் ரயில் நிலையத்திலும் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் கைது செய்யப்பட்டனர். கோட்டை நோக்கி பேரணியாக செல்ல முயன்றதாக ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications