"தீவிரவாதிகளின் நண்பன் ஜெ. அரசு".. சு.சுவாமியின் ட்விட்டர் விமர்சனத்துக்காக அவதூறு வழக்கு!
சென்னை: "தீவிரவாதிகளின் நண்பனாக ஜெயலலிதா அரசு உள்ளது" என்ற பாஜகவின் சுப்பிரமணியன் சுவாமியின் ட்விட்டர் விமர்சனத்துக்காக அவர் மீது தமிழக முதல்வர் ஜெயலலிதா அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.
சென்னை மாவட்ட முதன்மை செசன்சு நீதிமன்றத்தில் முதல்வர் ஜெயலலிதா சார்பில் மாநகர அரசு குற்றவியல் தலைமை வழக்கறிஞர் எம்.எல்.ஜெகன் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
தமிழக முதல்வர் ஜெயலலிதா, சாதி, மதம், இனம் என்று எவ்வித பாகுபாடுகளும் இல்லாமல் அனைத்து மக்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரே தலைவர் ஆவார். அவர், கடந்த 2011ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் பொதுமக்களின் பெரும் ஆதரவினை பெற்று முதல் அமைச்சராக பதவி வகித்து வருகிறார்.
|
ட்விட்டரில்..
இந்த நிலையில், பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த சுப்பிரமணியசாமி, தன்னுடைய ‘ட்விட்டர்' வலைதளத்தில் கடந்த செப்டம்பர் 11ந் தேதி முதல் அமைச்சர் பற்றி அவதூறான கருத்துக்களை பதிவு செய்துள்ளார்.

தீவிரவாத அமைப்புடன் நட்பு..
அதில், ‘ஜெயலலிதா அரசு தீவிரவாத அமைப்புடன் நட்பாக உள்ளது. விடுதலைப்புலி இயக்கத்தின் நிர்வாகி மறைந்த திலீபன் நினைவு தினத்தை தமிழகத்தில் கடைப்பிடிப்பதற்கு போலீசார் அனுமதி வழங்கியுள்ளனர்' என்று கூறியுள்ளார்.

அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை
இந்த கருத்தின் மூலம் தமிழக மக்கள் மத்தியில் முதல் அமைச்சருக்கு உள்ள நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது. எனவே, அவதூறான, ஆதாரமற்ற கருத்தினை இணையதளத்தில் வெளியிட்ட சுப்பிரமணியசாமி மீது அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

3வது அவதூறு வழக்கு
இந்த மனு மாவட்ட முதன்மை நீதிபதி ஆதிநாதன் முன்னிலையில் விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது. சுப்பிரமணியசாமி மீது ஏற்கனவே, முதல் அமைச்சர் ஜெயலலிதா சார்பில் இரண்டு அவதூறு வழக்கு தாக்கல் செய்துள்ள சூழ்நிலையில், தற்போது அவர் மீது மூன்றாவது வழக்கு தாக்கல் செய்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications