முல்லைப் பெரியாறு அணை மேற்பார்வைக் குழு அமைத்த மோடிக்கு நன்றி- ஜெ. கடிதம்
சென்னை: முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் பிரதமருக்கு நன்றி தெரிவித்து முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார். அதில், அணை நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த மேற்பார்வைக்குழு அமைத்ததற்கு நன்றி தெரிவித்துள்ளார்.
தற்போதைய தென் மேற்கு பருவ மழைக் காலத்திலேயே, உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி, முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 142 அடியாக உயர்த்தும் நடவடிக்கையை அணை மேற்பார்வைக் குழு நிறைவேற்றும் என தான் நம்புவதாகவும் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

உச்சநீதிமன்றம் உத்தரவு
இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு ஜெயலலிதா எழுதியுள்ள கடிதத்தில்,
முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த மேற்பார்வை குழு அமைக்க உச்சநீதிமன்றம் கடந்த மே மாதம் 7ஆம்தேதி உத்தரவிட்டது.
பிரதமருக்கு நன்றி
இதுதொடர்பாக கடந்த மாதம் 3-ம் தேதி தான் பிரதமரிடம் வலியுறுத்தியதன் அடிப்படையில், மத்திய அமைச்சரவையில் இந்த விவகாரம் ஆலோசிக்கப்பட்டு விரைவான நடவடிக்கை எடுத்ததற்காக பிரதமருக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் கடிதத்தில் முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.
நீர்வளத்துறை அமைச்சகம் ஆணை
உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 142 அடியாக உயர்த்தும் வகையில், அணை மேற்பார்வைக் குழுவை நியமித்து மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் வெளியிட்ட ஆணையை தமது அரசு பெற்றுக் கொண்டதாக குறிப்பிட்டுள்ளார்.
தென்மேற்கு பருவமழை காலத்தில்
தற்போதைய தென் மேற்கு பருவ மழைக் காலத்திலேயே, உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி, முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 142 அடியாக உயர்த்தும் நடவடிக்கையை அணை மேற்பார்வைக் குழு நிறைவேற்றும் என தான் நம்புவதாகவும் அந்த கடிதத்தில் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
-
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications