மீண்டும் தகராறு வந்தால் தேர்தலை நிறுத்திவிடுவேன்!- எச்சரித்த தேர்தல் அதிகாரி
சென்னை: நடிகர் சங்கத் தேர்தலில் மீண்டும் தகராறு ஏற்பட்டால் தேர்தலை நிறுத்திவிடுவேன் என்று தேர்தல் அதிகாரி நீதிபதி பத்மநாபன் எச்சரித்தார்.
தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் தற்போது இறுதிக் கட்டத்தை நெருங்கி வருகிறது. இதில் சரத்குமார் தலைமையிலான ஒரு அணியும், விஷால் தலைமையிலான மற்றொரு அணியும் போட்டியிட்டு வருகிறது. இந்த தேர்தலில் மொத்தம் 3139 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இதில் 783 பேர் தபால் மூலம் வாக்களித்துள்ளனர். இதுதவிர, இதுவரை 2200 பேர் நேரில் வந்து வாக்களித்துள்ளனர்.

ஆக மொத்தம், இதுவரை நடிகர் சங்க தேர்தலில் தபால் வாக்குளையும் சேர்த்து 3000 பேர் வாக்களித்துள்ளனர். இந்த தேர்தல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. இதையடுத்து, வாக்குகள் எண்ணும் பணி தொடரும். இன்று இரவுக்குள் இறுதி முடிவு எடுக்கப்பட்டு விடும்.
இந்நிலையில், தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது திடீரென இருதரப்பினருடைய வாக்குவாதம் ஏற்பட்டு, கைகலப்பு ஏற்பட்டதாக தகவல் வெளியாகியது.
இதுகுறித்து, தேர்தல் அதிகாரியான ஓய்வு பெற்ற நீதிபதி பத்மநாபன் கூறுகையில், "நடிகர் சங்க தேர்தலில் இரு அணிகளைச் சேர்ந்தவர்கள் மீண்டும் தகராறில் ஈடுபட்டால் தேர்தல் ரத்து செய்யப்படும்," என்றார்.
தற்போது நடிகர் சங்க தேர்தலில் ஏற்பட்ட பரபரப்பு நிலைமை கட்டுக்குள் வந்துள்ளதாகவும், தேர்தல் சுமூகமாக நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications