ஜெயலலிதா மறைவுக்குப் பின் மாநில உரிமைகளை அதிமுக அரசு இழந்து வருகிறது - எம்.எல்.ஏ குற்றச்சாட்டு
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின், மாநில உரிமைகளை அதிமுக அரசு இழந்து வருகிறது என கடையநல்லூ எம்.எல்.ஏ குற்றம்சாட்டினார்.
நெல்லை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின், மாநில சுயாட்சியை ஆளும் அதிமுக அரசு இழந்து வருகிறது என கடையநல்லூர் எம்எல்ஏ அபுபக்கர் குற்றம்சாட்டியுள்ளார்.
நெல்லை மாவட்டம் புளியங்குடியில் இந்திய யூனியன் முஸ்லீக் லீக் சார்பில் சமூக நல்லிணக்க கூட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்ட கடையநல்லூர் எம்எல்ஏ அபுபக்கர் பேசியதாவது: மத்தியில் ஆளும் பாஜக அரசு மக்கள் நலனில் அக்கறை செலுத்துவதில்லை. ஆனால், மாறாக சிறுபான்மையின மக்களுக்கு எதிரான அறிவிப்புகளை வெளியிட்டு அச்சுறுத்தி வருகிறது.

மேலும், கடந்த நவம்பர் 8ஆம் தேதி அறிவிக்கப்பட்ட பண மதிப்பிழப்பு நடவடிக்கையில் மத்திய அரசு தோல்வி கண்டுள்ளது. தமிழ்நாட்டில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு மாநில சுயாட்சியையும் மாநில உரிமைகளையும் ஆளும் அதிமுக அரசு இழந்து வருகிறது.
நீட் தேர்வில், மத்திய அரசு தமிழக அரசை பழி வாங்கி விட்டது. மாணவி அனிதா தற்கொலைக்கு மத்திய, மாநில அரசுகளே காரணம். நீட் பிரச்சனைக்கு தீர்வு காணும் முன்னரே நவோதயா பள்ளி, இந்தி திணிப்பு என பல்வேறு மக்கள் விரோத நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபடுகிறது.
மக்கள் நலனுக்கு எதிராக செயல்படும் பாஜக திட்டத்திற்கு ஆளும் அதிமுக அரசு துணை போவதுடன், ஆட்சியை தக்க வைக்கும் எண்ணத்தில் சுயநலத்துடன் செயல்படுகிறது. மக்கள் டாஸ்மாக்குக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் சூழலிலும் தமிழகம் முழுவதும் 1000 டாஸ்மாக் கடைகளை திறக்க அதிமுக அரசு முயற்சி செய்து வருகிறது. இந்த அரசு பெண்களின் கண்ணீரை துடைக்கும் அரசாக இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
-
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி












Click it and Unblock the Notifications