சிவாஜி கணேசனுக்காக இனி ஒரு சிலை செய்வோம்... எந்த நாளும் காப்போம்: ட்விட்டரில் கமல்
நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கான ஒரு சிலை செய்வோம் என ட்விட்டரில் கமல்ஹாசன் பதிவிட்டுள்ளார்.
சென்னை: சிவாஜி கணேசனுக்கான இனி ஒரு சிலை செய்வோம்; அதை எந்த நாளும் காப்போம் என ட்விட்டரில் நடிகர் கமல்ஹாசன் பதிவிட்டுள்ளார்.
ட்விட்டரில் நடிகர் கமல்ஹாசன் நாள்தோறும் ஏதாவது ஒரு விவகாரத்தை முன்வைத்து பதிவுகளை போட்டு வருகிறார். இரவு நேரங்களில் கமல்போட்டுவிடும் ட்விட்டருக்காக காத்திருப்போரும் இருக்கின்றனர்.

இந்த நிலையில் சென்னை மெரினாவில் இருந்து இரவோடு இரவாக நடிகர் சிவாஜி கணேசன் சிலை அகற்றப்பட்ட விவகாரம் குறித்து கமல்ஹாசன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
கமல்ஹாசனின் ட்விட்டர் பதிவு:
சிவாஜி ரசிகர் மனதிலும் நடிக்க நினைத்த தமிழன் மனதிலும் பதிந்தவர். இனி ஒரு சிலைசெய்வோம் அதை எந்த நாளும் காப்போம்.
சிவாஜி ரசிகர் மனதிலும் நடிக்க நினைத்த தமிழன் மனதிலும் பதிந்தவர். இனி ஒரு சிலைசெய்வோம் அதைக் எந்த நாளும் காப்போம் அரசுக்குமப்பால் என் அப்பா
— Kamal Haasan (@ikamalhaasan) August 3, 2017
அரசுக்குமப்பால் என் அப்பா
இவ்வாறு கமலஹாசன் பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications