கமலின் மையத்துக்கு வட சென்னையிலிருந்து ஒரு "விசில்" #MaiamWhistle
நடிகர் கமல்ஹாசனின் மையம் விசில் டிவிட்டருக்கு வடசென்னையிலிருந்து ஒரு புகார் வந்துள்ளது.
Recommended Video

சென்னை: நடிகர் கமல்ஹாசன் மக்களின் பிரச்சினைகளை பற்றி பேசுவதற்காக தொடங்கிய மையம் விசில் செயலிக்கு, அடிப்படை வசதிகளை கோரி வடசென்னையிலிருந்து ஒரு புகார் வந்துள்ளது.
நடிகர் கமல்ஹாசன் வல்லூர் அனல்மின் நிலையத்தின் சாம்பல் கழிவுகள் கொசஸ்தலை ஆற்றில் கொட்டப்படுவதாகவும், அதனால் பலத்த மழை பெய்தால் தண்ணீர் செல்ல வழியில்லாமல் பெரு வெள்ளம் ஏற்பட்டால் வடசென்னைக்கு ஆபத்து என்று தனது டுவிட்டரில் பதிவு செய்தார்.
வெறும் டுவிட்டரில் மட்டுமே மக்கள் பிரச்சினைகளுக்கு குரல் கொடுத்து வந்த கமல், எண்ணூர் கழிமுகத்திற்கு நேரில் சென்றும் ஆய்வு செய்தார். அங்குள்ள மக்களின் குறைகளை கேட்டறிந்தார்.

ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும்
இதைத் தொடர்ந்து திருவள்ளூர் ஆட்சியர் சுந்தரவல்லி கொசஸ்தலை ஆற்றில் ஆக்கிரமிப்புகள் இருந்தால் அவை உடனடியாக அகற்றப்படும் என்று உறுதி அளித்திருந்தார். இதன் தொடர்ச்சியாக கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே வல்லூர் அனல் மின் நிலையம் கட்டிய சாலையை அகற்ற நடவடிக்கையையும் ஆட்சியர் எடுத்தார்.

கட்சி குறித்த அறிவிப்பு
இந்நிலையில் அவரது பிறந்தநாளான கடந்த 7-ஆம் தேதி அதுகுறித்த அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் அதற்கான ஆயத்த பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவித்தார். இதைத் தொடர்ந்து 3 ஆப்களை (செயலிகள்) அவர் அறிமுகப்படுத்தினார்.

பொதுமக்கள் பிரச்சினை
மையம்விசில் என்ற ஆப்பில் பொதுமக்களின் பிரச்சினைகள் குறித்து பேசலாம் எனறும் ஒரு வேளை தான் அரசியலில் ஏதேனும் பொறுப்பு வகித்து அதில் தவறுகள் நடைபெற்றாலும் மக்கள் விசில் அடிக்கலாம் என்றும் கமல் தெரிவித்தார். இந்நிலையில் அந்த செயலிக்கு ஒரு புகார் வந்துள்ளது.
|
வடசென்னையிலிருந்து புகார்
வல்லூரையும் வடசென்னை அனல் மின்நிலையத்தையும் இணைக்கும் அத்திப்பட்டு சாலை மிகவும் மோசமான நிலையில் மண் அரிப்பு ஏற்பட்டு காணப்படுகிறது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இல்லாவிட்டால் ஆயிரக்கணக்கான உயிர்களுக்கு ஆபத்து ஏற்படும் என்றும் முதல்வரின் தனிப்பிரிவுக்கு புகார் அனுப்பப்பட்டுள்ளது. அந்த புகார் நகல் மையம் விசிலுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. அதில் இந்த பிரச்சினைக்கு முடிவு காண தாங்கள் தலையிட வேண்டும் என்று கமலுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications