இப்போதுள்ள ஆட்சியை மட்டுமல்ல, 50 ஆண்டுக் கால ஊழல் பற்றி கமல் பேச வேண்டும்: சீமான் ஆவேசம்
இப்போதுள்ள ஆட்சியை மட்டும் சொல்லாமல் 50 ஆண்டுக் கால ஊழல் பற்றி கமல் பேச வேண்டும் என்று சீமான் கூறியுள்ளார்.
சென்னை; தமிழகத்தில் நடைபெற்ற 50 ஆண்டுக் கால ஊழல் பற்றி கமல் பேச வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு சீமான் அளித்த பேட்டியில், கமல் அரசியல் பிரவேசம் குறித்தும், அவரது ஊழல் குறித்த கேள்விக்குப் பதில் அளித்தார்.

அதில், கமல் பாஜகவின் தத்துவத்திற்கு எதிரானவர் என்றும் இந்து மத துரோகி என எச்.ராஜா கூறியுள்ளதையும் சுட்டிக் காட்டினார் சீமான்.
தமிழகத்தில் தன்னைவிட கமலுக்கு ஊடக வெளிச்சம் அதிகம் இருப்பதால் அவரது வார்த்தைகள் மக்களை அதிக அளவில் சென்றடைகிறது என்றும் ஊழல் பற்றிய அவரது கருத்துக்கு தனக்கும் உடன்பாடு என்றும் சீமான் கருத்து தெரிவித்தார்.
மேலும், ஊழல் பற்றி பேசும் நடிகர் கமல் தமிழகத்தில் உள்ள 50 வருடங்களாக இருந்த ஊழல் பற்றியும் பேச வேண்டும் என்றும் இப்போதுள்ள ஆட்சியாளர்களை மட்டும் குறை கூறக் கூடாது என்றும் சீமான் கேட்டுக் கொண்டார்.
"அரசியலுக்கு கமல் ஏற்கனவே வந்துவிட்டேன் என்று கூறியுள்ளார். அரசியலுக்கு வருவது என்றால் கட்சியைத் தொடங்கி கொடியைப் பிடிப்பது மட்டும் இல்லை. ஒவ்வொரு மனிதனின் ஒவ்வொரு வார்த்தையும் அரசியல்தான். அரசியல் எண்ணம் இல்லாதவன் மனிதனே இல்லை என்கிறார் காந்தியடிகள் சொல்லி இருக்கிறார். திரைப்படத்தை விட ஆகச் சிறந்த அரசியல் வேறு ஒன்றுமே இல்லை" என்று சீமான் கூறினார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications