கோவையில் கன்னட இலக்கிய விழாவுக்கு எதிராக போராட்டம்- நிகழ்ச்சி ரத்து
Subscribe to Oneindia Tamil
கோவை: கோவையில் நடைபெற்ற கன்னட நிகழ்ச்சியை ரத்து செய்யக் கோரி தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் அரங்கில் நுழைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை அண்ணா சிலை அருகே தனியார் அரங்கில் சமகால கன்னட இலக்கிய விழா நேற்று நடைபெற்றது. காவிரி நதிநீர் பிரச்னையில் தமிழகத்திற்கு எதிராக கன்னட திரை நட்சத்திரங்கள் குரல் கொடுத்து வருகின்றனர்.

அத்துடன் தமிழக இளைஞர் ஒருவரையும் கன்னட கும்பல் ஒன்று சரமாரியாக தாக்கியிருந்தது. இதனால் தமிழகத்தில் கொந்தளிப்பான நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் கன்னட இலக்கிய விழா கோவையில் நடைபெறக் கூடாது என்று வலியுறுத்தி தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் முழக்கங்களை எழுப்பினர். அப்போது விழாவின் பேனர்கள் கிழிக்கப்பட்டன.
இதனையடுத்து கன்னட இலக்கிய விழா நிறுத்தப்பட்டது. இதனால் கோவையில் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications