உயிர் பெற்று வந்த கட்டபொம்மனும், பாரதியாரும்.. காரைக்குடி மாணவர்களின் மாறுவேடப் போட்டி
காரைக்குடி: சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உளள இராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் நடந்த மாறுவேடப் போட்டியில் மாணவ, மாணவியர் விதம் விதமான வேடங்களில் வந்து அசத்தினர்.
மாறு வேடப் போட்டியில், ஆசிரியை எம்.கோமதி வரவேற்றார். மாணவர்கள் நேரு, காந்திஜி போன்ற தலைவர்கள் போலவும், வீரபாண்டிய கட்டபொம்மன், பாரதியார் போன்ற விடுதலைப் போராட்ட வீரர்கள் போலவும் வண்ணத்துப்பூச்சி, சிங்கம் போன்ற விலங்குகள் போலவும் மாறுவேடம் பூண்டு வந்தனர். மேலும், இளவரசி, தேவதை, ஆசிரியர், ஆதிவாசி, வேடமணிந்தும் போட்டியில் கலந்து கொண்டனர்.

போட்டியில், ஆறாம் வகுப்பில் முதல் பரிசு எஸ்.கே.திவ்யஸ்ரீ, இரண்டாம் பரிசு எஸ்.சத்யா, மூன்றாம் பரிசு எஸ்.தீபக் ஆகியோருக்குக் கிடைத்தது. ஏழாம் வகுப்பில் முதல் பரிசு கே.சுதர்சன் மற்றும் என்.பாலாஜி ஆகியோருக்கும், இரண்டாம் பரிசு மதுமிதா மூன்றாம் பரிசு பி.யாழினி ஆகியோர் பெற்றனர்.
போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை தலைமையாசிரியர் ஆ.பீட்டர்ராஜா வழங்கினார். ஆசிரியை ஏ.கீதா நன்றி கூறினார்.












Click it and Unblock the Notifications