கர்நாடகா பந்த் - தமிழக அரசு பேருந்துகள் ஓசூரோடு நிறுத்தம்!
கர்நாடகாவில் முழு அடைப்பு போராட்டம் நடைபெறுவதால் தமிழக அரசு பேருந்துகள், ஓசூர், பண்ணாரியில் நிறுத்தப்பட்டுள்ளன.
கிருஷ்ணகிரி: மகதாயி நதிநீர் பிரச்சினை, விவசாயிகள் கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று கர்நாடகாவில் முழு அடைப்பு போராட்டம் நடைபெறுவதால் தமிழகத்தில் இருந்து செல்லும் அரசு பேருந்துகள் எல்லைகளில் நிறுத்தப்பட்டுள்ளன.
கர்நாடக மாநில விவசாயிகளின் கடன்களை ரத்து செய்ய கன்னட அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன. கர்நாடகத்தில் இன்று கன்னட அமைப்புகள் முழு அடைப்பிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதில் வாட்டாள் நாகராஜ் தலைமையிலான கன்னட அமைப்புகள் பங்கேற்கின்றன.

முழு அடைப்பு போராட்டத்தின் அடையாளமாக கர்நாடகாவில் பேரணி நடத்த திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் கர்நாடகா செல்லும் தமிழக அரசு பேருந்துகள் எல்லைப் பகுதியான ஒசூரில் நிறுத்தப்பட்டுள்ளன.
திருப்பூர், ஈரோடில் இருந்து மைசூர் செல்லும் பேருந்துகள் பண்ணாரியில் நிறுத்தப்பட்டுள்ளன.
பாதுகாப்பு காரணங்களுக்காக பேருந்துகள் தமிழக எல்லையில் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் கர்நாடக மாநில அரசு பேருந்துகள் வழக்கம் போல் இயக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. பெங்களூரு, மைசூரு உள்ளிட்ட பல முக்கிய நகரங்களில் உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கடந்த ஆண்டு காவிரி போராட்டத்தின் போது, தமிழக அரசுப் பேருந்துகள் கர்நாடகாவில் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஒசூரில் பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
-
நள்ளிரவில் ஜொலிக்கும் பெங்களூர்.. RCB வெற்றியால் ரசிகர்கள் செய்த சம்பவம்.. இந்த வீடியோ பாருங்க -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
பெங்களூருவுடன் ஒப்பிடுவது தவறு.. பரந்தூர் விமான நிலையம் குறித்து பூவுலகின் நண்பர்கள் கருத்து -
பெங்களூர்: என்னடா அநியாயம் பண்றீங்க.. வீட்டு வாடகை ரூ.1.1 லட்சமா.. அதிர்ச்சியில் ஐடி ஊழியர்கள்! -
சிம்பிளாக பதவியேற்பு.. கர்நாடகாவில் கவனத்தை ஈர்க்கும் டி.கே.சிவகுமார்! காரணம் இதுதான்! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
கர்நாடகா முதல்வராகிறார் டிகே சிவக்குமார்.. ஜூன் 3ம் தேதி பதவியேற்பு.. சித்தராமையா மகனுக்கு ‘ஜாக்பாட்' -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications