என் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை: கார்த்தி சிதம்பரம் பொளேர்
தம் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை என்று கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார்.
சென்னை: என் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை என்று கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார். குற்றச்சாட்டுகள் அனைத்தையும் அரசியல் ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் சந்திப்பேன் என்றும் அவர் கூறினார்.
முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரத்தின் வீடுகளில் இன்று காலை முதல் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அவர்களது வீடுகள் மட்டுமின்றி, சென்னை, காரைக்குடி, டெல்லி, நொய்டா உள்பட 14 இடங்களில் சிதம்பரம் குடும்பத்தினருக்கு சொந்தமான இடங்கள், அலுவலகங்களில் சோதனை நடைபெற்றது. இதில் சென்னையில் மட்டும் 8 இடங்களில் ரெய்டு நடைபெற்றது.
கடந்த 2007-08ம் ஆண்டில் வெளிநாடு முதலீட்டு மேம்பாட்டு வாரியம் மூலம், ஐஎன்எக்ஸ் மீடியா குழுமத்திற்கு ஒப்புதல் வழங்கியதில் நடந்த முறைகேடு தொடர்பான இந்த சோதனை நடைபெற்றதாக சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்தன. சோதனையின் முடிவில் ஆவணங்கள் எதுவும் கைப்பற்றப்படவில்லை என்று, கார்த்தி சிதம்பரம் நிருபர்களிடம் தெரிவித்தார்.
அதேநேரம், கார்த்தியை நுங்கம்பாக்கத்திலுள்ள அவரின் அலுவலகத்திற்கு சிபிஐ அதிகாரிகள் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். சுமார் 7 மணி நேரத்திற்கும் மேலாக சோதனை நடைபெற்றது.
இந்நிலையில் இரவு 9 மணியளவில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள கார்த்தி சிதம்பரம் அலுவலக வளாகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், நான் எந்த தவறும் செய்யவில்லை. எனது வருமானம் குறித்து முறையாக வரி கட்டியுள்ளேன். மத்திய அரசு என்னை வேண்டுமென்றே பழிவாங்குகிறது. என் மீதான குற்றச்சாட்டுகள் உண்மைக்கு புறம்பானவை, இந்த சவாலை சட்டரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் சந்திப்பேன். இவ்வாறு அவர் கூறினார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications