அதிமுக அரசு ‘அம்மா’ புகழ் பாடிக் காலத்தைக் கழித்துக் கொண்டிருக்கிறது: கருணாநிதி
சென்னை: காவிரிக்கு குறுக்கே தடுப்பணை கட்டும் விவகாரத்தில் கர்நாடகா தீவிரமாக இறங்கியுள்ள நிலையில், தமிழகத்தில் அதிமுக அரசு அம்மா புகழ் பாடிக் காலத்தைக் கழித்துக் கொண்டிருக்கிறது எனக் கருத்துத் தெரிவித்துள்ளார் திமுக தலைவர் கருணாநிதி.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள கேள்வி - பதில் வடிவிலான அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது :-
கேள்வி:- காவிரி ஆற்றில் மேகதாதுவில் அணைகள் கட்டுவது உறுதி என்று அந்த மாநில முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்திருக்கிறாரே?
கலைஞர்:- இந்தக் கேள்வியை நாம் கேட்டாலோ, நினைவுபடுத்தினாலோ, அவசர அவசரமாக பேரவையில் இன்றைக்கே முதலமைச்சர் பன்னீர்செல்வம் ஒரு அவசரத் தீர்மானம்கொண்டு வந்து காவிரி ஆற்றைத் தோற்றுவித்ததே எங்கள் "அம்மா"தான், அதற்காக ஒரு பாராட்டுத் தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என்று ஆரம்பித்து விடுவார்!
உடனே அவை முன்னவர் எழுந்து, "கருணாநிதிக்கு என்ன தெரியும்? ஐந்து முறை முதலமைச்சராக எப்படி இவர் இருந்தார்? இவருக்கு ஒன்றுமே தெரியாது, எல்லாம் எங்கள் "அம்மா"வுக்குத் தான் தெரியும்!" என்று ஆரம்பித்து விடுவார்.
அதற்குப் பதில் கூற கழக உறுப்பினர்கள் எழுந்தால், உடனே வெளியேற்றி விடுவார்கள். ஆனால் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா "காவிரி டெல்டா பகுதியில் உள்ள மேகதாதுவில் அணைகள் கட்ட அரசு திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக திட்ட வரைவு தயாரிக்க உலகளாவிய டெண்டர் விடப் பட்டுள்ளது" என்றெல்லாம் கூறி, ஏடுகளிலே அந்தச் செய்திவந்துள்ளது.
இதற்கிடையே, காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு புதிய அணை கட்ட திட்டமிட்டுள்ள நிலையில், கட்டுமானப் பொருள்களைக் கொண்டு செல்வதற்கு ஏதுவாக, வனப் பகுதியிலிருந்து மேகதாதுவுக்குச் செல்ல சங்கமத்தில் இருந்து அர்த்தாவதி ஆற்றின் குறுக்கே புதிதாகப் பாலம் கட்டும் பணி மேற்கொள்வது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என்றும் ஏடுகளிலே செய்தி வந்துள்ளது. கர்நாடக அரசு மேலும் மேலும் அணை கட்டும் முயற்சியிலே ஈடுபட்டு செயலிலே தொடர்ந்து முனைப்பு காட்டி வருகிறது.
ஆனால் நம்முடைய அ.தி.மு.க. அரசு "அம்மா" புகழ் பாடிக் காலத்தைக் கழித்துக் கொண்டிருக்கிறது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
-
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
அமைச்சர் ராஜ்மோகனுக்காக.. அகற்றப்பட்ட கலைஞர் படம்.. கடும் எதிர்ப்பால் மீண்டும் வைக்கப்பட்டது! -
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்!












Click it and Unblock the Notifications