பேரறிஞர் அண்ணாவின் 107வது பிறந்த நாள்.. அண்ணா சிலைக்கு கருணாநிதி, ஸ்டாலின் மலர் தூவி மரியாதை
சென்னை: பேரறிஞர் அண்ணாவின் 107வது பிறந்த நாளையொட்டி, அவரின் திருவுருவ படத்துக்கு திமுக தலைவர் கருணாநிதி, பொருளாளர் மு.க.ஸ்டாலின் போன்றோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
பேரறிஞர் அண்ணாவின் 107வது பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, வள்ளுவர் கோட்டத்திலுள்ள அண்ணா சிலை அமைந்துள்ள பகுதிக்கு காலை 8.30 மணியளவில் திமுக தலைவர் கருணாநிதி சென்றார். அங்கு சிலைக்கு கீழே வைக்கப்பட்டிருந்த உருவப்படத்துக்கு அவர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
பேரறிஞர் அண்ணா அவர்களின் 107வது பிறந்த தினத்தை முன்னிட்டு, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அமைந்துள்ள அண்ணா அவர்களின் திருவுருவச்சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தியபோது #DMK #Perarignaranna #Kalaignar
Posted by Kalaignar Karunanidhi on Monday, September 14, 2015
திமுக பொருளாளர் ஸ்டாலின், அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதேபோல, க.அன்பழகன், கனிமொழி, ஆ.ராசா, துரைமுருகன், ஜெ.அன்பழகன், தயாநிதி மாறன் போன்ற திமுகவின் முக்கிய தலைவர்களும் அண்ணாவுக்கு மரியாதை செலுத்தினர்.