முல்லைப்பெரியாறில் வாகன நிறுத்துமிடம் அமைக்கும் விவகாரம்... தடையை நீக்க கோரி கேரள அரசு மனு
சென்னை : முல்லைப்பெரியாறு நீர்ப்பிடிப்பு பகுதியில் வாகன நிறுத்துமிடம் கட்டுவதற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரி தென்மண்டல பசுமை தீர்ப்பாயத்தில் கேரள அரசு மனுத்தாக்கல் செய்துள்ளது.
அதில், வாகன நிறுத்துமிடத்திற்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் கேரள அரசு கோரியுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் பசுமை தீர்ப்பாயம் விதித்த இடைக்கால உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று கேரள அரசு வலியுறுத்தியுள்ளது.
வாகன நிறுத்தும் இடம் தொடர்பாக மத்திய நில அளவைத்துறை தாக்கல் செய்த அறிக்கைக்கு எதிராக பெரியார் புலிகள் வனக்காப்பக அறக்கட்டளையும் மனுத்தாக்கல் செய்துள்ளது. இந்த வழக்கில் தமிழக, கேரள அரசுகளின் தலைமை வழக்கறிஞர்கள் ஆஜராவதற்கு ஏதுவாக வழக்கின் விசாரணையை செப்டம்பர் 7ஆம் தேதிக்கு பசுமை தீர்ப்பாயம் ஒத்திவைத்துள்ளது.
மேலும், நில அளவைக்காக நிர்ணயிக்கப்பட்ட தொகையை விட கூடுதலாக 3 லட்சத்து 49ஆயிரம் ரூபாய் செலவாகியுள்ளதால், அந்த தொகையினை இருமாநில அரசுகளும் ஒரு மாத்திற்குள் செலுத்த வேண்டும் என்றும் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
-
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை












Click it and Unblock the Notifications